17/04/2017

விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் வலுக்கும் போராட்டம்.. வள்ளுவர் கோட்டத்தில் இளைஞர்கள் உண்ணாவிரதம்...


சென்னையில் விவசாயிகளில் போராட்டத்துக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் ஐ.டி ஊழியர்கள், மாணவர்கள், இளைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர்களின் போராட்டத்தை கண்டுக்கொள்ளவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்.

டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வித்தியாசமான போராட்டங்களில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 34-வது நாளான இன்று, தமிழக விவசாயிகள் வளையல் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் ஐ.டி ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் இணைந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.