17/04/2017

திருப்புர் சாமளாபுரத்தில் காவல்துறையின் காட்டுமிராண்டி தாக்குதலுக்கு இந்த எம்எல்ஏ தான் காரணமா..?


எம்எல்ஏ கனகராஜ் ஐ போராட்டத்தின் போது சுற்றி வளைத்து ஹாயா வந்து உட்காறுவதற்கா உனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சுருக்கோம் என போலிஸ் முன்பாகவே போராட்டம் நடத்திய பொதுமக்கள் கேட்கின்றார்கள்.

இதில் கனகராஜ் ஆத்திரமடைகின்றார். பொதுமக்கள் சுற்றிலும் இருந்ததால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை, போலிசார் பொதுமக்களிடம் போங்க போங்க போய் ரோட்ல போராட்டம் பன்னுங்க என அனுப்பி வைக்கின்றனர்.

தன்னை அசிங்கப்படுத்தி சுற்றி வளைத்து விட்டார்கள் என்பதற்காக  போலிசாரை ஏவி விட்டது இவர் தான் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். அது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கண்ணாடிகளை தானே உடைத்து பொதுமக்கள் தான் உடைத்தார்கள் என போலிசார் நாடகமாடியது அம்பலமான நிலையில் இந்த வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.