25/10/2017

மணல் கடத்தலை பற்றி செய்தி வெளியிட்ட நிருபரின் கடையை அடித்து நொறுக்கிய ரவுடிகள்...


கடலூர் புதுப்பாளையம் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் தலைமை செய்தி பத்திரிகையின் நிருபர் செல்வமணி அவர்கள் மணல் திருட்டை பற்றியும் அதிகாரிகளின் லஞ்சத்தை பற்றியும் செய்தி வெளியிட்டுள்ளார்.


இதற்கு ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள்  செல்வமணி அவர்களின் தாயார் நடத்தி வரும் கடைக்குள் மாட்டுவண்டியை விட்டு கடையை சேதாரப்படுத்தி உள்ளனர். இதை தட்டி கேட்ட நிருபரிடம் இப்ப என்ன உன் அம்மா செத்தா போயிட்டா அடி தான பட்டிருக்கு விடு செலவுக்கு வேனும்னா பணம் வாங்கிக்கோ என கூறி சண்டையிட்டுள்ளனர்.


மேலும் காவல் நிலையத்தில் நம் செய்தியாளர் மீது புகாரும் அளித்துள்ளார்கள் மணல் கடத்தல் கும்பல்.

காவல் துறையும் விசாரித்து விட்டு நம் செய்தியாளரை சமாதானமாக போக சொல்லியும் இனிமேல் தேவையில்லாமல் செய்திகள் வெளியிட வேண்டாம் எனவும் எச்சரித்து அனுப்பியுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.