14/04/2018

யானைகளை கொடுமைப்படுத்தும் கோவில் நிர்வாகங்கள்...




காமம் என்பது உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவை என்பது கூட புரியாமல் கோயில்களில் பெண் யானைகளுக்கு ஆண் யானைகளை கண்ணிலேயே காட்டாமல் இறுதி வரை 'புனிதமான' வைத்திருக்கிறார்கள்...

இது போல தமிழக கோயில்களில் இன்று சிறைப்பட்டிருக்கும் பெண் யானைகள் 40க்கும் மேல்.

தன் உணர்வுகளை 30 40 வருடங்களாக வெளிப்படுத்த இயலாமல் மனநிலை பாதிக்கப்பட்டு கோபமுறும்போது பெண் யானைகளை அடித்து துவைத்து காயப்படுத்தி கொடுமை செய்து 'புனித'த்தை பாதுகாக்கிறார்கள்.

கண்ணிமைப்பது போல மூச்சு விடுவது போல மாத சுழற்சி பெண்மையில் ஒரு பாகம் என்று கூட பார்க்காமல் பெண்களை மாதாமாதம் தூரமாக தள்ளி வைத்து கோயில்களை புனிதமாக பாதுகாக்கும் முட்டாள்தனம் வாயில்லா யானைகளை வேறு எப்படி வைத்திருக்கும்?

நாம் மட்டும் குடும்பமாக கோயிலுக்குச் செல்கிறோம் இந்த யானை வருடக்கணக்காக தனியாகவே இருக்கிறதே என்று ஒரு நாளும் கேள்வி கேட்காத நம்மை என்ன சொல்வது?

ஒரு குழந்தையை வன்புணர்வு செய்யும் போதே எழுந்து வராத கடவுள் ஒரு யானை புணர்ந்தால் ஓடி வந்து உங்கள் கண்களை குத்தவா போகிறது?

எத்தனை அழகழகான குட்டிகள் ஈன்றிருக்கும் தமிழக கோயில்களில் வாழும் 40 பெண் யானைகளும்?

நாளைக்கு யானை இனமும் அழிந்து விட்டது என்று ஒப்பாரி வைத்து என்ன பிரயோஜனம்?

இதோ துன்புருத்தப்பட்ட ஒரு பெண் யானையின் புண் ஆறாமல் முற்றி இருக்கும் புகைப்படம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.