15/08/2017

இதுதான் மருத்துவர் கபீல் கான் செய்த தவறா? பயங்கரவாத பாஜக யோகியே...


மருத்துவமனை 69 லட்சத்துக்கு மேல் கடன் பாக்கி வைத்திருந்ததால் தனியார் ஆக்சிஜன் சப்ளை நிறுவனம் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் தர மறுத்துவிட்டது. எல்லா வகையிலும் முயன்று பயன் கிடைக்காததால் தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார் மருத்துவர் காஃபீல் கான்.

இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றினார்.

மருத்துவமனையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த திரிபாதி பேசுகையில், “மற்ற டாக்டர்கள் நம்பிக்கையை இழந்த போது கான் மட்டும் போராடி தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிலிண்டர்களை வாங்கிவந்தார். அவர் பல்வேறு குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார், அவர் எப்போதும் எல்லோருடைய மனதிலும் நிற்பார்,” என கண்ணீர் மல்க கூறினார்...

இவர் இஸ்லாமியர் என்பதாலும்.. பாஜக யோகி அரசின் செயல்படாத மானங்கெட்ட அரசின் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தாலும்.. இன்று இந்த மருத்துவரை பணி நீக்கம் செய்துள்ளான் பாஜக பயங்கரவாதி யோகி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.