05/08/2018

5 மார்க் பெற்றவருக்கு மறுமதிப்பீட்டில் 77 மதிப்பெண்கள்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய அண்ணா பல்கலை விடைத்தாள்...


அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் மறு கூட்டலில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி கொண்டு மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறுகூட்டலில் மட்டும் சுமார் 400 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தில், 5 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு மறு மதிப்பீட்டின்போது 77 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஆதாரங்கள்தான் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறப்புடகிறது. 2017ம் ஆண்டு ஏப்ரல்/மே மாதத்தில் தேர்வு எழுதிய ஒரு மாணவரின் மதிப்பெண் பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றியுள்ளது.

இதுபோல பல மாதிரி விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.