19/11/2017

இறந்த மூதாட்டியின் தலையணைக்கு அடியிலிருந்த பழைய ரூ 500 ரூ 1000 நோட்டுகள்...


பழைய ரூ.500 நோட்டுகள் செல்லாது என்பதை அறியாமல் இறுதி சடங்கிற்காக மூதாட்டி ரூ.35 ஆயிரம் சேமித்து வைத்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

இதை அறியாமல் தனது இறுதி சடங்கிற்காக பழைய 500 ரூபாய் நோட்டுகளை தலையணைக்கு அடியில் வைத்திருந்த மூதாட்டி இறந்து விட்டார். அந்த பணத்தை மாற்ற முடியாமல் உறவினர்கள் தவிக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அய்யம் பெருமாள். இவரது மனைவி லட்சுமி (வயது 74). சில ஆண்டுகளுக்கு முன்பு அய்யம்பெருமாள் இறந்து விட்டார்.

அதன் பிறகு லட்சுமி, தனது தம்பியான முத்துசாமியின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த லட்சுமி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து முத்துசாமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் லட்சுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இறந்த லட்சுமி பயன்படுத்திய பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக எடுத்தனர்.

அப்போது அவரது தலையணைக்கு அடியில் கடந்த ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 நோட்டுகள் இருந்தது. அதை எடுத்து எண்ணிப் பார்த்தபோது, அதில் ரூ.35 ஆயிரம் இருந்தது. இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.