19/11/2017

பாஜக மோடி அலை கருத்துகணிப்பு... நியூஸ் 7 தொலைக்காட்சியின் டூபாக்கூர் வேலை...


சீனி, அரிசி, வெங்காயம், பெட்ரோல் என்று அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருப்பது பாஜக ஆட்சியில் தான் என்பதை மக்கள் அனைவரும் பேசி வருகிறார்கள்.

மாட்டை வைத்து நாட்டை நாசப்படுத்தி மதநல்லிணக்கத்தை முன்பை விடவும் அதிகமாக நாசப்படுத்தியவர்கள் இந்த பாஜக-வினர் தான் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி.

காஷ்மீரிய பொது மக்கள் மீது பெல்லட் ரக தோட்டாக்கள் வீசி அவர்களை நிர்க்கதியாய் ஆக்கி உலகளவில் அசிங்கப்பட்டதும் இதே பாஜக அரசு தான் என்பது இந்த உலகமே அறிந்துள்ளது.

நிலவரம் இப்படியிருக்க நியூஸ் 7 தொலைக்காட்சி ஏன் பாஜக அரசின் கைப்பாவையாக மாறி இருக்கிறது என்பதில் தான் இப்பொழுது மக்களிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.