21/11/2017

திருச்சி மாவட்டம், துறையூர் மதுராபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பூட்டை உடைத்து திருடர்கள் கைவரிசை...


திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய மாதிரி நடுநிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை  208 குழந்தைகள் பயின்று வருகின்றனர் இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் தலைமை ஆசிரியர் M. சாமிகண்ணு கூறுகையில் கடந்த வெள்ளி கிழமை மாலை பள்ளி முடிந்து அனைத்து கதவுகளையும் பூட்டி சென்றுவிட்டோம் இன்று காலை பள்ளிக்கு வந்து பார்க்கும் போது கதவு பூட்டு உடைந்து காணப்பட்டது. உள்ளே உள்ள 4 பீரோகளும் திறந்து அதிலுள்ள ஆவணங்கள் கலைந்து கிடந்தன.

மேலும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுதரும் 2 லேப்டாப்கள் காணவில்லை என கூறினார். மேலும் இப்பள்ளிக்கு பாதுகாவலர் இல்லாத காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்களின் குற்றச் சாட்டாக உள்ளது இந்த திருட்டு சம்மந்தமாக துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை செய்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.