14/04/2019

தமிழகத்தின் சுவையான உணவுகளும்... அவற்றின் இடங்களும்...


தமிழகத்தில் எந்த மாவட்டத்தில், எந்த உணவு சிறப்பு என்று ருசியுங்கள்...

1. சிம்மக்கல் - கறி தோசை, கோலா உருண்டை.
2. நடுக்கடை - இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா.
3. சிதம்பரம் -கொத்சு.
4. புத்தூர் -அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்.
5. திருவானைக்கா - ஒரு ஜோடி நெய் தோசை.
6. கும்பகோணம் - பூரி-பாஸந்தி.
7. ஸ்ரீரங்கம் - இட்லி பொட்டலம்.
8. மன்னார்குடி - அல்வா.
9. கூத்தாநல்லூர் - தம்ரூட்.
10. நீடாமங்கலம் - பால்திரட்டு.
11. திருவையாறு - அசோகா.
12. கும்பகோணம் - டிகிரி காபி.
13. விருதுநகர் - பொரிச்ச பரோட்டா.
14. கோவில்பட்டி - கடலை மிட்டாய்.
15. ஆம்பூர் - தம் பிரியாணி.
16. நாகர்கோவில் - அடை அவியல்.
17. சாத்தூர் - சீவல்.
18. திருநெல்வேலி - இருட்டுக் கடை அல்வா.
19. ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா.
20. செங்கோட்டை - பார்டர் கடை. பரோட்டா, நாட்டுக் கோழி வறுவல்.
21. மணப்பாறை - அரிசி முறுக்கு.
22. கீழக்கரை - ரொதல் அல்வா.
23. திண்டுக்கல் - தலப்பாக் கட்டி பிரியாணி.
24. பண்ருட்டி - முந்திரி சாம்பார்.
25. மதுரை - ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்.
26. சாயல்குடி - கருப்பட்டி காபி.
27. பரமக்குடி - சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா.
28. பழனி - சித்தநாதன் பஞ்சாமிர்தம்.
29. கமுதி - மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி.
30. ‪புதுக்கோட்டை - முட்டை மாஸ்‬.
31. தூத்துக்குடி - மக்ரூன்.
32. சௌக்கார் பேட்டை - மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி.
33. கன்னியாகுமரி - தேங்காய் சாதம், மீன் குழம்பு.
34. ராமநாதபுரம் - கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்.

35. செட்டிநாடு - ஒவ்வொரு ஊருக்கும் ஏதாவது ஒன்று சிறப்பா இருக்கும், ஆனா நம்ம ‘செட்டி நாட்டுலே’ மட்டும் தாங்க செய்யிற எல்லா உணவுமே சிறப்பாயிருக்கும்.

அப்படிபட்ட செட்டி நாடு உணவு வகைகளில் சில...

1. குழிப்பணியாரம்.
2. வாழைப்பழ தோசை.
3. எண்ணெய் கத்தரிக்காய்.
4. பால் பணியாரம்.
5. பூண்டு வெங்காய குழம்பு.
6. ரவா பணியாரம்.
7. பால் கொழுக்கட்டை.
8. சேமியா கேசரி.
9. மோர் குழம்பு.
10. நாட்டுகோழி மிளகு வறுவல்.
11. இறால் தொக்கு.
12. நாட்டுக் கோழி ரசம்.
13. நண்டு மசாலா.
14. வெண்டைக்காய் புளிக்கறி.
15. பருப்பு சூப்.
16. ரிப்பன் பக்கோடா.
17. பருப்பு உருண்டை குழம்பு.
18. குருமா குழம்பு.
19. தேன்குழல்.
20. கருப்பட்டி பணியாரம்.
21. சீயம்.
22. மாவுருண்டை.

உணவுக்காக, உணவுப் பொருட்களுக்காக போர் புரிந்த கதை எல்லாம் நம்ம ஊரிலே மட்டும் தான் எப்படி நடந்துச்சுனு இப்ப தெரியுதா? அவ்வளவு ஏன்..

கொலம்பஸுகளும் வாஸ்கோடமாக்களும் இந்தியாவை தேடி எதுக்கு அலைஞ்சாங்க?

இங்கே கொட்டி கிடந்த வேறு எங்குமே கிடைக்காத 'மசாலா' பொருட்களுக்காக மட்டுமே தான்னுங்கிறது நிதர்சமான உண்மை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.