25/07/2018

மனிதனும் இயற்கையும்...


நமது முன்னோர்கள் இயற்கையை கடவுளாகவும்..
இயற்கையை கணித்தும்.. இயற்கையைஉடன் ஒட்டி  தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்து  வந்தார்கள்...

அதிகமாக நிலவை கணித்து தன் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள்..

ஆமாம்..

தன்வாழ்வில் விலங்குகள் பறவைகள் இவைகளிடம் அன்பால் ஒட்டி வாழ்ந்தார்கள்.

இரவில் நிலவை ரசித்து மனதை ஒருநிலை படுத்துவார்கள்.

இயற்கை உணவுகளை உண்டு வாழ்ந்துவந்தார்கள்.

ஆனால் இன்று..

மனிதர்கள்  இயந்திர வாழ்க்கை மற்றும்
மதம் ஜாதி அரசியல் சினிமா கிரிக்கெட் நாகரீகம் ஆகையால் இயற்கையை பிரிந்து வாழ்கின்றனர்.

மனிதர்களை வீட்டினுள் பைத்தியக்காரர்களாக மாற்றுவது ஊடங்கள் மட்டுமே.

தீர்வு...

தினமும் முடிந்த வரை ஊடங்களை தவிர்த்து நிலவை ரசியுங்கள்..

குழந்தைகளுக்கு இயற்கையை பற்றி சொல்லி தாருங்கள்..

ஆறு மலை இயற்கை மிகுந்த இடத்தில் குடும்பத்துடன் வாரம் ஒருமுறை சென்று வாருங்கள்..

வீட்டில் பறவைகள் விலங்குகள் உடன் அன்பால் இனையுங்கள்..

உறவினர்களின் வீடுகளில்  சென்று அவர்களின் பாசத்தை பெற்றுக் கொள்ளுங்கள்.. முடிந்தால் கூட்டு குடும்பமாக வாழுங்கள்.

ஊர் மக்களுடன் இயற்கை பற்றி கலந்துரையாடுங்கள்...

மரம் செடி கொடிகளை நேசியுங்கள்...

முடிந்தால் கிராமங்களில் வாழுங்கள

இயற்கை உணவுகளை உட்கொள்ளுங்கள்...

நீங்கள் கொடுப்பது தான் நீங்கள் பெறுவீர்கள் இது இயற்கையின் விதி..

முதலில் தாருங்கள் மறுமுறை பெற்று கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.