02/04/2018

அமானுஷ்யம் - அல்ஃபோனா (Alfonso) இத்தாலியில் வாழ்ந்த கிறிஸ்தவ மதகுரு...


22/9/1774 ஆம் ஆண்டு இத்தாலியில் இருந்த “பலஸ் தெல் கொதி” இல் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தியானித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரம் வெளியில் வந்து, அங்கிருந்த மக்களை பார்த்துவிட்டு மீண்டும் அறைக்குள் சென்றார்.

சற்று நேரத்தில் திரும்பி வந்து “போப்” சற்று முன்னர் இறந்து விட்டார் என அறிவித்தார்…

அனைவருக்கும் ஆச்சரியம், பலர் நம்பவுமில்லை…

போப் இருப்பது ரோம் நகரில், அதாவது அந்த காலப்பகுதியில் இவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு நாள் பயணம்..

மறு நாள்… ரோமில் இருந்து உத்தியோக பூர்வமாக போப் இறந்த தகவல் அந்த நகருக்கு வந்தது.

அனைவருக்கும் ஆச்சரியம், எப்படி இங்கிருந்தபடியே அல்ஃபோனால் அந்த தகவலை கூறமுடிந்தது?

உள் உணர்வாக இருக்கும் என முடிவெடுத்தவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சிதகவல் கிடைத்தது.

போப் இறந்த போது அங்கிருந்த சூழ் நிலை பற்றிய தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

அதில், போப் இறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அங்கு வந்த அல்ஃபோனா அவரின் அருகில் இருந்து ஜெபம்(செபம்) செய்ததாக உறுதியான தகவல்கள் கிடைத்தன..

இது எப்படி?

ஒரே நபர் ஒரே நேரத்தில் பல கிலோமீட்டர் தூர இடைவெளியில் உள்ள இருவேறுபட்ட இடங்களில் இருக்க முடியும்?

இது தான் Bilocation (இரட்டை மனை) எனப்படும் மர்மம்...

மேலே நாம் பார்த்தது வரலாற்று பதிவில் இடம்பெற்ற ஒரு சம்பவம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.