12/03/2018

தற்போது நிலவிவரும் துருப்பிடித திராவிடமும் அதிகார ஆரியக் கூட்டமும் பற்றிய செய்திகளில் சில....


கடந்த நாற்ப்பத்து ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் என்ற பெயரில் திராவிடம் என்ற இந்தியத்தின் பொய் முகக் கட்சிகளே தமிழர்களை இதுநாள் வரை ஆண்டு வருகின்றன.

இதில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரண்டு கட்சிகளும் தமிழ் நாட்டு மக்களுக்கு  அழுகின்றப் பிள்ளைக்கு இரண்டு பொம்மைகளைக் காட்டி ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொள்  என்று சொல்வதைப் போல இரண்டில் ஒன்று மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை என்னவென்றால்  தி.மு.க.- ஆட்சியின் ஊழல்-பகல் கொள்ளை-கருப்புச்சட்டம் போன்றக் குற்றங்களை அ.தி.மு.க.-நேரடியாக விமர்சித்து மக்களுக்குத் தெரிவிக்கின்றது, தி.மு.க. -வும், அ.தி.மு.க.விற்க்கு எதிராக அதையேத் தெரிவிக்கின்றது..

இதனால் தமிழ் மக்களாகிய நாம் வாக்காளர்களாக விலைக்கு விற்க்கப்பட்டு வருகின்றோம்.

திராவிடம் என்றச் சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தேசிய இனங்களுக்கான ஒற்றைச்சொல் என்றுக் கூறி திராவிட மாயை யால் ஏய்த்துவரும் இந்தியத்தின் பொய்முகக் கட்சிக் கூட்டத்திற்கு
திராவிடம் என்ற சொல் சமசுகிருத மொழிச்சொல், அதன் உட்ப்பொருள்  தமிழரினம் என்பதன் உன்மை தன்மையை மறைத்து தமிழரினத்தை அடிமைச் செய்து வருகின்றது.

இந்தியத்தின் ஆரியப் பார்ப்பனியம்.
இப்படி இந்திய தேசியத்தாலும், திராவிடக் கட்சிகளினாலும் தமிழகளாகிய நாம் காலம் காலமாக நமதுச் சொந்த மண்ணைப் படிப்படியாக மதிய - மாநில, ஆட்சியாளர்களினால் இழந்து வருகின்றோம்.

ஏனிந்த நிலை ?

தமிழன் அல்லாதவர்கள் தமிழகத்தை ஆள்வதனால்த் தானே...

தமிழ்நாட்டில் காங்கிரசு என்ற கருமாதிக் கட்சியால் " பச்சைத் தமிழன்" காமராசர் முதல்வராக இருந்தகாலத்தில் தமிழகளின் நிலங்களான "காசர்கோடு" - "பீர்மேடு" - "தேவிகுளம்" போன்ற தமிழனுக்குச் சொந்தமான நிலங்களை கேரளா அரசிற்கு தாரை வார்த்தார் நமது பெருந்தலைவர் காமராசர்.

அதனால் தமிழர்களிடையே ஏற்ப்பட்ட எதிர்ப்புகளை நமது பெருமைக்குரிய  " பச்சைத் தமிழன்" தமிழனுக்கே உள்ள  ஏமாளித்தமனத்தால் வந்தாரை வாழவைத்த தமிழகம் கொடுத்தால் குறைந்துவிடமாட்டோம் என்று கூறி தமிழனின் ஏமாளித்தமனத்தால் ஏமாற்றினார்..

இந்த காங்கிரசு என்ற கருமாதிக் கட்சியால் இந்திய விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக தமிழனின் மேற்க்கு எல்லைகள் பரிப்போனது.

பிறகு மீண்டும் ஒரு முதல்வர் வந்தார்..

காங்கிரசுக் கட்சிக்கு-பக்த்தவச்சலம்- தமிழர்களை கொன்று நிலங்களையும், உடைமைகளையும் சூறையாடிய கன்னட- இன வெறியர்களுக்கு தமிழனின் தங்கச்சுரங்கத்தை பரிசளித்தார் மீண்டும் ஒரு வடமேற்க்கு எல்லையும் கோலார் தங்கவயலையும் இழந்தோம்.

மூன்றாவதாக வந்த முதல்வர் "ஆரிய மாயை" என்று கதைபாடி - திராவிட மாயையில் தமிழனை" அடிமைச் செய்த மிகச்சிறந்தப் பேச்சளர் பேரறிஞர் அண்ணாதுரை - என்ற தெலுங்கன். ( தன் இனத்திற்கு மறைமூகமாக நன்மை செய்தார்).

அவரின் ஆட்சி காலத்தில் ஆந்திரத் தெலுங்கர்களின் மதராசி மமதே என்ற எல்லைத்தாண்டிய பயங்கரவாதப் போராட்டத்திற்கு விடையளிக்க வக்கற்றப் பேரறிஞர் என்னும் பொறுப்பற்ற அண்ணாச் சொன்னார்.. சென்னைக்கு பதிலாக திருப்பதியை தருகின்றோம் என்று மீண்டும் ஏமாளித் தமிழனின் இலக்கணம் செத்துப் போனது.

குணகடல் குமரி குடகம் வேங்கடம் எனும் நான்கும் தமிழகத்தின் எல்லை என எத்தனை முறை சொன்னாலும் பேரறிஞர் என்ற அண்ணாவுக்குத் தெரியாதாம். அதனால் நாம் திருப்பதியைத் தராவிட்டால் அவர்கள் சென்னையை கேட்ப்பார்கள் என்றுச் சொன்னார் நமது திராவிட மாயையின் முற்ப்போக்கு முதல் தலைவன் அண்ணா.

தமிழனுக்கான நிலத்தை பரித்த இந்தியாவின் சூழ்ச்சமம் புரியாதத் தமிழனை நாடோடியாக்கக் காலம் காலமாக திட்டமிட்டு வருகின்றது ஆரியம் என்ற நாடோடி இனக் கூட்டம்..

திட்டமிடே தமிழினத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும், கொலையாட்சிச் செய்தும் தமிழனின் நிலங்களை சூழ்சியின் மூலம் கொள்ளையடித்தும் வருகின்றது தமிழனை இந்தியன் என்றுச் சொல்லிச் சொல்லி ஏமாற்றி வருகின்றது இந்திய இறையாண்மை.

தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதென்றால் கேரளாவின் பாலக்காட்டையும் கருநாடகவின் பெங்களூருவையும் ஆந்திராவின் விசயவாடவையும் தமிழ் நாட்டின் எல்லை என்று வரையரை செய்ய வேண்டியதுத் தானே.

இந்தியத்திற்காக இறையாண்மை பேசிய தமிழகத் தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் மார்வாரிகள்- வனிகதில் மின் பொருள் முதல் மென் பொருள் வரை தமிழனை கொள்முதல் செய்ய அணுமதிப்பதில்லை. இரும்பு முதல் தங்கம் வரை அனைத்து விற்பனையும் சூரையாடப்பட்டு வருகின்றது..

தமிழனின் உழைப்பும் தமிழனின் வேளைவாய்ப்பும் மராத்திய, ஒரிய, தெலுங்கு கூலிகளால் பரிக்கப்பட்டு வருகின்றது.

இனியாவது நாம் அனைவரும்  தமிழர் என்ற உணர்வோடு இருந்தால் மட்டுமே நமதுச் சொந்த வீட்டைக்கூட பாதுகாக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழினம் தற்போது விழிப்புணர்வு பெற்று வருவதால்.. தமிழகத்தை முழுவதுமாக அழிக்க திட்டமிட்டு.. அதற்காகவே மீத்தேன், அணுஉலை, சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த தயாராக இருக்கிறார்கள்..

இதனை அனைத்துத் தமிழ் மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டிய நிலையில் உள்ளோம் என்பதை  அறிந்துணர்ந்து ஒன்றுப்பட்டு செயல்படுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.