08/01/2018

காவு வாங்க காத்திருக்கும் 1187 குழிகள்...


திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் ரோடு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழுது அடைந்து வாகன ஓட்டிகளுக்கும் ,பயணிகளுக்கும் மிக ஆபத்தான நிலையில் உள்ளது இது.

திருநெல்வேலி மேம்பாலத்தில் இருந்து தென்காசி பழைய பேருந்து நிலையம் முடிய மொத்த குழிகள் 1187.

இதில் லாரி மற்றும் பேருந்தை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 142 உள்ளது.

நான்கு சக்கர வாகனங்கள் கார் மினிலாரிகளை கவிழ்த்து விபத்தை உட்படுத்தும் குழிகள் மொத்தம் 640.

இருசக்கர வாகனங்களை கவிழ்த்தி விபத்தினை ஏட்படுத்தும் குழிகள் மொத்தம் 405 உள்ளது.

வழக்கம் போல் மண்ணை போட்டும், தெர்மாகோல் போட்டும் மூடாமல் பெரிய விபத்தை உட்படுத்தும் முன் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த வழியில் ஐயப்ப பக்தரின் வாகனங்கள் ஒருநாளைக்கு 500 மேல் திருநெல்வேலில் இருந்து தென்காசி செல்கின்றன.

இருநாட்களுக்கு முன்னதாகக் கூட லாரியுடம் வேன் மோதி விபத்துக்குள்ளானது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.