10/02/2018

கதிராமங்கலம் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராடிய பள்ளி சிறுவர்கள் முதற்கொண்டு அனைவர் மீதும் வழக்கு பதிவு...


அவர்கள் பள்ளி சீருடையில் இருக்கும் போது அவர்களுக்கு குடுக்க வேண்டிய மரியாதை இல்லை.. தரையில் உற்கார வைக்கப்பட்டு உள்ளனர்...

பள்ளி கல்வித்துறை இதனை கவனித்து சம்பந்த பட்ட காவலர்கள் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்...

அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள் ?

தங்கள் நிலத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு.. இதற்கு தமிழக அரசு ஒரு காரணம்..

படிக்க வேண்டிய அழகான இந்த குழந்தைகளை போராட வைத்தது தான் இந்த அரசின் செயல்...

இராணுவ வீரன் நம் மண்ணை காக்க எல்லையில் இருக்கிறான்...

உள்ளூரில் நம் அரசு நம்மை காக்க தவறிய காரணத்தினால் இப்படி மண்ணை காக்க வேண்டும் என்றும் இயற்கை வளங்கள் பாதுகாக்க பட வேண்டும் என்று போராடிய சிறுவர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் இவர்களை தூண்டிய அரசின் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் காவல் துறை ?

இதையெல்லாம் பார்த்த பிறகு தான் நான் இந்தியன்னு சொல்லிக் கொள்வதில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.