07/10/2018

புதனும் சுக்கிரனும்...


ஜோதிடத்தில் புதனுக்கு மட்டும் ஏன் ஆட்சி/உச்சம் மற்றும் மூலதிரிகோண வீடு அவருடைய சொந்த வீடான கன்னியாக இருக்கிறது என்கிற நண்பர்களின் சந்தேகத்தை தீர்க்கும் பதிவாகும்.

அனைத்து கிரகங்களும் சூரியனின் வீடாகிய சிம்மம் மற்றும் சந்திரனின் வீடாகிய கடகத்தை ஆரோகண மற்றும் அவரோகன ஆரம்பப் புள்ளிகளாகக் இரண்டு வீடுகளைக் கொண்டிருக்கும். அவையே அவற்றின் ஆட்சி வீடுகளாகும், தவிர எல்லாக் கிரகங்களும் உச்சமாவது வேறொரு கிரகத்தின் வீட்டிலாகும். ஆனால புதன் மட்டும் தனது சொந்த வீடான கன்னியிலே உச்சம் பெறுவார். காரணம் புதனின் உச்ச நிலைப்பாடு என்பது சுக்கிரனை மையமாக வைத்து தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும்.

(சுக்கிரனின் உச்சம் காலனுக்கு அயன ஸ்தானத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்).

ஏனெனில் புதன்/புத்தி, சுக்கிரன்/உணர்வு. இதில், புத்தியாகிய புதனும் உணர்வாகிய சுக்கிரனும் எதிர் துருவங்களாகும்.

அதாவது புத்தி செயல்படும்போது  உணர்வு வேலை செய்யாது; அதுபோல உணர்வு மேலோங்கும்போது புத்தி மட்டுப்படும். அதனாலேயே அவை எதிரெதிர் துருவங்களாயின...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.