20/07/2017

தேச விரோத பிரச்சாரங்களை செய்கின்றனர், வெளியே விட்டால் ஓஎன்ஜிசிக்கு பாதிப்பு ஏற்படும் கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி...


கைது செய்யப்பட்டவர்கள் ஓஎன்ஜிசிக்கு எதிராக தேச விரோத பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவர்களின் தூண்டுதலின் பேரிலேயே குழாயை பொதுமக்கள் உடைத்தனர்.

இதனால் 6 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அவர்களை வெளியே விட்டால் ஓஎன்ஜிசிக்கு பாதிப்பு ஏற்படும் எனவே அவர்களை வெளியே விடக் கூடாது என ஓஎன்ஜிசி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நக்கீரனிடம் கூறியதை தொடர்ந்து நீதிபதி இவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.