22/10/2018

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாமக வின் முதலமைச்சர் வேட்பாளரை நான் ஏன் ஆதரிக்கிறேன்...



1) பெயர் : மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
2) வயது : 50
3) பிறந்த தேதி : 09.10.1968
4) கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரி

12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி.

2003 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics - LSE) மேம்பட்ட பொருளாதாரம் (Introductory macroeconomics) படித்தார்.

படிக்கும் காலத்தில் கால்பந்து (Foot Ball), தடகளம் (Athletics) உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம். இறகுப் பந்தாட்டம் (Badminton), டென்னிஸ் (Tennis), ஹாக்கி (Hockey), கைப்பந்து (Volley Ball), கூடைப்பந்து (Basket Ball), கிரிக்கெட் (Cricket) ஆகிய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் நாட்டு நலப்பணித்திட்டம்(N.S.S) மற்றும் தேசிய மாணவர் படை(N.C.C) ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலிருந்துள்ளார்.

சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது விளையாட்டுச் செயலாளாராகப் பணியாற்றியுள்ளார்.

5) குடும்ப உறுப்பினர்கள்..

துணைவியார் : திருமதி. செளமியா அன்புமணி
மகள்கள் : திருமதி. சம்யுக்தா பிரிதிவன்
  செல்வி. சங்கமித்ரா செளமியா அன்புமணி
  செல்வி. சஞ்சுத்ரா செளமியா அன்புமணி

6) பணிகளும் பிற சேவைகளும்..

நல்லாளம் கூட்டுச் சாலை சந்திப்பு கிராமத்தில் மக்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான மருத்துவ சேவை.

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது, 1000 ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரியது, 50 தடுப்பணைகளைக் கட்டியது ஆகியவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஆற்றிய பணிகளில் சிலவாகும்.

சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிராகவும், மது மற்றும் புகையின் தீமைகளுக்கு எதிராகவும் எண்ணற்ற போராட்டங்கள்.

பசுமைத் தாயகம் அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ சிறப்பு ஆலோசனைத் தகுதிக்கான (Special consultative status with United Nations ECOSOC) அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.

பசுமைத் தாயகம் அமைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் (United Nations Human Rights Council - UNHRC) உறுப்பினராக நியமிக்க வைத்தார்.

தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் தலைவராக (President, Tamilnadu Badminton Association) பதவி வகித்து வருகிறார்.

7) பங்கேற்ற சர்வதேச நிகழ்ச்சிகள்..

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். 2000-ஆவது ஆண்டில் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.

2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2002) மாநாட்டில் கலந்து கொண்டார்.

2003 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாட்டில் (World Water Conference) பங்கேற்றார்.

2012 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2012) மாநாட்டில் பங்கேற்பு.

2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

8) நடுவண் அமைச்சராகப் பணியாற்றியபோது படைத்த சாதனைகள்...

2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதப் வரை நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

நடுவண் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாநாடுகளுக்குத் தலைமையேற்றும், பங்கேற்றும் உள்ளார்.

இந்தியாவில் முதன்முறையாக 108 தேசிய அவசர ஊர்தித் திட்டத்தைத் (108 National Anbulance Service) தொடங்கினார்.

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் (National Rural Health Mission) தொடங்கி அனைத்து கிராமப்புற சுகாதாரத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (National Program for Control of Diabetes, Cardiovascular disease and Stroke) கொண்டு வந்தார்.

மருத்துவ நலவழி ஆராய்ச்சித் துறையை (Department of Health Research - DHR) ஏற்படுத்தினார்.

அயோடின் சத்து சேர்க்கப்பட்ட உப்பின் (Iodised Salt) பயன்பாட்டைக் கட்டாயமாக்கினார்.

பாரம்பரிய அறிவுசார் எண்ணியல் நூலகத்தை (Traditional Knowledge Digital Library) உருவாக்கினார்.

தேசியத் தொற்று நோய் கண்காணிப்பு நிறுவனத்தை (National Institute of Communicable Diseases) அமைத்தார்.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (Food Safety and Standards Authority of India) ஏற்படுத்தினார்.

தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை (National Institute of Siddha) அமைத்தார்.

சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை (National Institute of Aging) அமைக்க நடவடிக்கை எடுத்தார்.

தானாக செயலிழக்கும் மருந்தேற்றுக்குழல் ஊசியை (Auto disposable syringe) அறிமுகப்படுத்தினார்.

இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை (Public Health Foundation of India) ஏற்படுத்தினார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற சிறந்த தன்னாட்சி நிறுவனமாக (JIPMER Puducherry Act 2008) மாற்றினார். மேலும் அம்மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் உருவெடுத்துள்ளது.

2006 ஆம் ஆண்டு மே மாதம் 22 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு ஜெனீவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற உலக சுகாதார அவையின் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.

9) புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்..

பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதித்து சட்டம் (Ban on smoking in Public places) கொண்டு வந்தார். இதன்மூலம் பொது இடங்களில் மக்கள் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் புகையின் பாதிப்பின்றி நடமாட முடிந்தது.

சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகளின் மீதும் அவற்றின் தீமைகளை விளக்கும் எச்சரிக்கைப் படங்களை (Pictorial warning) வெளியிடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்.

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதித்தார்.

உணவுப் பொருட்களில் புகையிலை இருக்கக்கூடாது என்ற விதியை கொண்டு வந்தார். அதன்பயனாகவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

தேசிய ஆல்கஹால் கொள்கையைக் (National Alcohol Policy) கொண்டு வந்தார்.

10) வென்ற விருதுகள்..

சர்வதேச விருதுகள்..

அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control).

உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership).

உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award) இந்தச் சிறப்பு விருதினை இதற்கு முன் பெற்ற முக்கிய பிரமுகர்கள் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் கோஃபி அன்னன் போன்ற தலைவர்களாவர்.

தேசிய விருதுகள்...

சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.

இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்

11) தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள்...

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission - NRHM) கீழ் ரூ.15,000 கோடி மதிப்புள்ளத் திட்டங்கள்.

சென்னையில் ரூ. 100 கோடியில் மாதர்நலன், மகப்பேறு, மற்றும் தாய் சேய் நல அதி உயர் சிறப்பு மையம் (Institute of Obstetrics and Gynecology & Govt. Hospital for Women and Children).

சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).

மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).

சென்னையில் ரூ.250 கோடியில் இரத்த அணுக்கூறு பிரிப்பு மையம் (Plasma Fractionation Centre).

சென்னையில் ரூ.50 கோடியில் மாநகர ரத்த வங்கி (Metro Blood Bank).

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை மண்டல புற்றுநோய் மையமாக (Regional Cancer centre) அறிவித்தது.

காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் (Regional Cancer centre).

செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா (Integrated Vaccine Complex).

ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம் (Stem cell research centre).

தமிழக நெடுஞ்சாலைகளில் மதுரை, தாம்பரம், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துக்காய சிகிச்சை மையங்களை (Trauma center) அமைத்தார்.

12) 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

13) 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திராவிடக்கட்சிகள் கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி, தருமபுரி தொகுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

14) பொழுதுபோக்குகள்...

1. இறகுப் பந்தாட்டம் (Badminton).

2. ஸ்கூபா மூழ்கல் (SCUBA Diving).

3. நீருக்குள் நீந்துதல் (Snorkeling).

4. நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீன் பிடித்தல் (In-land & Deep-sea fishing).

5. மலையேற்றம் (Mount Climbing).

6. மலை பகுதிகளில் நீண்ட தூரப்பயணம் (Trekking).

7. அரை மராத்தான் (Half Marathon).

நீங்கள் ஏன் பாமக வை ஆதரிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்காக எனக்கு தெரிந்த தகவல் வரை பதிவிட்டுள்ளேன்...

இப்படிப்பட்ட திறமையான ஒரு முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பது என் கடமை மட்டுமல்ல... ஒட்டு மொத்த தமிழகத்தின் கடமையாகும்...

இல்லையேல் தமிழகத்தை மொத்தமாக விற்று மொத்தமாக அழித்துவிடுவார்கள் இந்த ஊழல் திராவிடவாதிகள்...

ஆகையால் விழித்துக்கொள் தமிழினமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.