22/10/2018

850 விவசாயிகளின் கடனை நான் அடைக்கிறேன் - அமிதாப் பச்சன் அறிவிப்பு...


பாலிவுட் மெஹாஸ்டார் அமிதாப் பச்சன் இது தொடர்பாக கூறியிருப்பதாவது, ‘நாட்டுக்காக உயிர்நீத்த 44 வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவது மிகவும் திருப்திகரமான அனுபவமாக உள்ளது. மேலும், மகாராஸ்டிராவைச் சேர்ந்த 112 ஏழ்மையான குடும்பங்களுக்கும் நாங்கள் உதவி செய்யவுள்ளோம். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் இதுபோன்ற ஏழ்மையானவர்களை கண்டறிய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வலைதளபதிவில், கடன் பிரச்னையால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க நாங்கள் அவர்களின் கடன்களை செலுத்த உள்ளோம். இதற்காக உத்தரப்பிரதேசத்தில் உள்ள 850 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் சார்பாக சுமார் 5.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தைச் செலுத்தவுள்ளோம். இது தொடர்பாக வங்கியுடன் பேசியுள்ளோம். முன்னதாக மகாராஸ்டிராவைச் சேர்ந்த 350 விவசாயிகளின் கடன்களும் செலுத்தப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார். இவரின் செயல் சமூக வலைதளங்கள் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.