02/08/2018

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்... ஊடகங்கள், முற்போக்கு போராளிகள் ஓடி ஒளிந்தது எங்கே?


விழுப்புரம் மாவட்டத்தில், சாதி மறுப்புத் திருமணம் செய்த காரணத்தால், காதலன் குடும்பத்தினர் வசித்த பகுதியில் புகுந்து, காதலி தரப்பை சார்ந்தவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த கொடூர நிகழ்வில் தலையிட்டு நீதி கேட்க முற்போக்காளர்களோ, பத்திரிகையாளர்களோ முன்வரவில்லை.

விழப்புரம் சாதிமறுப்பு காதலும், கலவரமும்...

இந்த சம்பவம் குறித்து கூறப்படும் தகவல்கள்...

விழப்புரம் மாவட்டம் மடப்பட்டு அருகே அரும்பட்டு கிராமத்தில் அருந்ததியர் இன இளைஞர் ஒருவர் சக பள்ளி தோழியான பறையர் இன பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் தலைமறைவாகியுள்ளர்.

இதன் தொடர்ச்சியாக, பறையர் இன இளைஞர்கள் 30 பேர் அருந்ததியர் இளைஞரது வீட்டுக்குள் புகுந்து அவரது அண்ணி தாலியை அறுத்து, குடும்பத்தினரை கொடுரமாக தாக்கி...

சக்கிலி நாயே பறையர் பொண்ணு வேணுமா ஒரு நாள் உங்களுக்கு அவகாசம் பெண்ணை அனுப்பு இல்லைன்னா குடும்பத்தை உள்ளே வைத்து கொளுத்துவேன் என மிரட்டியுள்ளனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் விழப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாதிக்கொடுமைக்கு நீதி வேண்டும்..

இந்த கொடூர நிகழ்வில் தலையிட்டு நீதி கேட்க முற்போக்காளர்கள் முன்வருவார்களா? 

ஊடகங்கள் நேரலை விவாதங்களை நடத்துமா?

அரசியல் கட்சிகள் உண்மை அறியும் குழுக்களை அனுப்புமா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.