பார்ப்பனீய மையம் உருவாக்கிய இராமாயணத்தில் மேலோட்டமாக பார்த்தால் இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதையும் எமது உறவுகள் இன்று வரை நம்பிக்கொண்டு உள்ளார்கள் என்பது நிதர்சனம் இது உண்மையா இல்லை பொய்மையா என்று சில உறவுகள் விடை தெரியாது உள்ளார்கள் உங்களுக்கான விடை இன்று பார்ப்போம்.
தமிழர்களாகிய நம்மை பார்ப்பனீயர் சூழ்ச்சி செய்யப்பட்டு உளவியல் ரீதியாக தமிழ் இனத்திற்கு எதிரான கருத்தியலை விதைத்து நம்பும்படி செய்து விட்டார்கள்.
இதன் வெளிப்பாடே தமிழ் மன்னரான இராவணன் விட பார்ப்பனீய காமுகன் ராமன் நல்லவர் வல்லவர் என்று நினைத்துக் கொண்டுள்ளோம்.
சரி நமது உறவுகளிடம் யார் இராவணன் என கேட்ட்டால்?
இராவணன் ஒரு பெண் மோகம் கொண்ட அரக்கன் என்றுதான் சொல்லுவார்கள்.
சரி நமது உறவுகளிடம் யார் இராமன் என்று கேட்டுப் பார்த்தால் ?
இந்துக் கடவுள் திருமாலின் ஏழாவது அவதாரம் மற்றும் இச்வாகு குல அயோத்தியின் அரசர் தசரதனின் நான்கு மகன்களில் மூத்தவர் இப்படி பார்ப்பனீய கருத்தியலை கக்குவார்கள்.
இந்த தொடர் ஊடாக நீங்கள் உள்வாங்கும் கருத்தியல் எமக்கான விடுதலை கருத்தியலாக அமைய வேண்டும் பார்ப்பனீய உளவியல் யுத்தத்தை ஊடருக்கும் கருத்தியலாக இருக்க வேண்டும்.
இந்த கருத்தியலை ஒவ்வொரு தமிழனும் மாற்றி உண்மையான கருத்தியலை உள்வாங்கிக் கொண்டு உங்களது குடுபத்திற்கு உண்மையை எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த தொடர் எழுதப்படுகின்றது.
நமது தமிழ் மன்னர் இராவணன் பற்றி பார்ப்போம்.
இராவணன் காலத்தில் "ஈழம்" மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.
முழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை சான்றுகள் இருக்கின்றன.
இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அது போக தமிழ் மன்னர் இராவணன் பார்ப்பனீய காமுகன் இராமனால் கொல்லப்படவில்லை.
உலகத்தின் மூத்த இனம் தமிழினம. தற்போதைய இந்தியாவில் அரப்பா, மொகஞ்சதாரோ என்ற பகுதிவரை பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனறும், உலகத்தின் மிகச்சிறந்த நாகரீகமடைந்த மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள் தான் எனப் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர்.
ஆனால் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம் இமயம் முதல் குமரிக்கண்டம் வரை பரவி வாழ்ந்த நம் தமிழினம் இன்று தமிழ்நாடு மற்றும் தமிழீழம் என்ற குறுகிய பகுதிக்குள் சுருங்கியது எப்படி என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
உலகெங்கிலும் அடக்கி ஆண்டு வாழ்ந்து வந்த நம் தமிழ் இனம், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கனவாய் வழியே துருக்கி பகுதியில் இருந்து புகுந்த ஆரிய இனத்தால் வீழ்ந்தது தமிழினம்.
உள்ளே புகுந்த ஆரிய இனம் மெல்ல மெல்ல நம்மை வஞ்சகமாக புராணம், இதிகாசம் என்ற பெயரில் வீழ்த்தியது.
அப்படி பார்ப்பனீய தமிழர்களுக்கு இடையே நடந்த போரில் ஆரியர்கள் தமிழர்களை வஞ்சகமாக வெற்றி கொண்டதின் குறியீடகாவே, நம் தமிழ் மன்னர்களான இராவணர், நரகாசுரர், இரணியர் போன்றோர்களை அரக்கர்களாக, அசுரர்களாக சித்தரித்தது வந்தேரி ஆரிய பார்ப்பனிய இனம்.
புராணங்களில் வரும் அரக்கர்கள் அசுரர்கள் ஆகியோர் கருப்பாக இருப்பது என்பது அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு எளிய உதாரணம்.
அப்படி ஒன்று தான் ஆரியர்கள் தங்களுக்காக எழுதிக்கொண்ட இராமாயணம்.
பார்ப்பனீய -தமிழர் போரையே இராமாயணம என்றும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் தமிழர்ககளைத் தான் என்றும் பார்ப்பனீய ஜவர்களால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்றவர்கள் தெளிவாக கூறியுள்ளனர்.
அதில் தமிழ் மாமன்னராகிய இராவணன் அவர்களை அரக்கனாக, அசுரனாக சித்தரித்து பார்ப்பனீய இராமனை கதாநாயகனாக சித்தரித்து மகிழ்ந்தது வந்தேரி பார்ப்பனீய இனம்.
தமிழ் இனத்தின் குறியீடாக இராவணன் உயர்ந்து நிற்க்கிறார். அத்தகைய இராவணனை அவரது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கெளுத்தும் இராமலீலாவை டெல்லியில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடி அரசாண்ட தமிழ் மக்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.
இராவணன் வீரம் போற்றுதலுக்குரியது மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான்.
முதன் முதலில் இராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான்.
இராவணனை தமிழ் மன்னன் என்று ராமசாமி நாயக்கர் சொன்னார். இராமாயன எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது.
சீதையைக் கடத்தி வந்ததைத் தவிர இராவணன் எந்தத் தவறும் செய்யாதவர், அதுவும் தன் தங்கை அவமானப்படுத்தப்பட்டதற்கு பழி வாங்கத்தானேத் தவிர காமத்தால் அல்ல. இந்தக் குரல்கள் மேலெழும்ப ஆரம்பித்திருக்கின்றன.
நாசிக்கில், பழங்குடி மாணவர்களின் ஹாஸ்டலில் இந்த செப்டம்பர் 30ம் தேதி, இராவணன் போல வேடமிட்டு இருந்த மனிதரைச் சுற்றி 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் ”இராவண ராஜா வாழ்க, இராவண ராஜா வாழ்க” என முழக்கம் எழுப்பி இருக்கின்றனர்.
விதர்பா அருகில் இன்னொரு பழங்குடிச் சமூகத்தில் தசராவில், இராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுவதை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் இராவணன், மகிஷாசூரன் உருவ பொம்மைகளை எரிப்பதற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட பத்திரிகை செய்தி பற்றி இங்கு ஏற்கனவே பகிரப்பட்டு இருந்தது.
பழங்குடி மக்களின் திருமணங்களில் இராவணனிடம் ஆசீர்வாதம் வாங்குவது போல் நிகழ்ச்சிகள் இப்போது வழக்கமாகி வருகின்றன.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், மே.வங்காளத்தில் பழங்குடி மக்களிடம் எதிர்க் கலாச்சாரம் பரவி வருகிறது. ’மகாராஷ்ட்ரா ராஜ்ய ஆதிவாசி பச்சோ அபியான்’ என்னும் அமைப்பு இராவணன் மீது வாரி இறைக்கப்பட்டு இருக்கும் அவதூறுகளுக்கு எதிராக பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. அவ்வமைப்பின் தலைவர், அசோக் பாகல், ‘இராவண வழிபாட்டை மையப்படுத்தி செயல்பாடுகள் இருந்தாலும், இந்த மண்ணின் பூர்வகுடிகளுக்கு, அவர்களின் ஆதாரங்களை மீட்டெடுப்பதுதான்’ அமைப்பின் நோக்கமாக சொல்கிறார்.
இந்திய வலதுசாரிகளின் பீடமான ஆர்.எஸ்.எஸ்ஸின் நெற்றிப் பொட்டில் விண்ணென்று உறைக்க, துடிதுடித்துக் கத்த ஆரம்பித்திருக்கிறது. அதன் தேசீயத் தலைவர்களில் ஒருவரான அனிருத்தா தேஷ் பாண்டே ‘இராவணனை மகிமைப்படுத்துவது’ என்பது நாட்டின் கலாச்சாரத்தையே பிளவுபடுத்துவதாகும் என அலறி இருக்கிறார். ‘பழங்குடி மக்களை கெடுக்கிறார்கள்’’ என புலம்புகிறார்கள். ஒன்றிரண்டு பழங்குடி மக்கள் பகுதிகளில்தான் ‘இராவணனை’ நாயகனாக கருதுகிறார்கள், பெரும்பாலானவர்கள் இன்னமும் ராமர் வெற்றி பெறுவதைத்தான் கொண்டாடுகிறார்கள்’ என்று தங்களை சமாதானப்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆனால் தீப்பற்றி விட்டது. புகைய ஆரம்பித்து இருக்கிறது.
பார்ப்பனியம் காலம் காலமாய் இந்த சமூகத்தின் மூளைக்குள் ஏற்றி வைத்திருந்த பிம்பங்கள், சிந்தனைகளை தகர்த்து எறியும் விதைகள் முளைக்க ஆரம்பித்து விட்டன.
யோகி ஆதித்தியநாத் 100 மீட்டர் உயரத்தில் இராமருக்கு சிலை வைக்கட்டும். அவர்களின் இதிகாசங்கள், காவியங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், இராமரை மையப்படுத்திய அரசியல் அதிகாரங்கள் எல்லாவற்றையும் கிழித்தெறிய இராவணன் மீண்டும் தோன்றி இருக்கிறார்.
தமிழினம் ஆபத்து வரும் போதெல்லாம் தற்காக்கும் முகமாக இராவண மன்னர் வருவார் அது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபகரனாக இருக்கலாம். தமிழ் நாடு தேசியத் தலைவர் தோழர் தமிழரசனாக இருக்கலாம். இதை படிக்கும் உங்களில் பலராகவும் இருக்கலாம் ஒவ்வொரு தமிழ்மக்களிடமும் நமது முன்னோர்கள் மரபு இணைந்து உள்ளது.
தமிழ் இனத்திற்கு எதிராக பார்ப்பனீயமும் அதன் அடிவருடிகளும் உருவாக்கப்படும் எதிர் வினையாக்கத்தை முறியடிக்க பேர் புகழ், அடையாளம், தவிர்த்து முகம் மறைத்து இனத்தின் அடையாளம் மட்டுமே பெரியதென போராடும் ஒவ்வொரு தமிழனும் இராவணன் தான்...