25/02/2021
Clover field paradox அறிவியல் விரும்பிகளுக்கான மற்றுமொரு படம்...
கதை படி ஒரு ஸ்பேஸ் ஷிப் குழு ஒன்று space இல் ஆய்வு ஒன்று செய்கிறது.
அதாவது பூமியில் energy sorce தீர்ந்து வரும் நிலையில் free energy பெற துகள் முடக்கி (particle accelator ) கொண்டு ஆற்றலை பெற முயற்சிக்கிறது.
பூமியில் நாம் வைத்துள்ள மிக பெரிய ஆய்வு கூடம் அல்லது ஆய்வு கருவி எது என்றால் அது hadron collieder எனும் துகள் முடக்கி தான்.
கிட்ட தட்ட 20 கிமி சுற்றளவு கொண்ட பிரமாண்ட ஆய்வு கருவி அது (படத்தில் அல்ல நிஜத்தில்) அந்த collider இன் மினி வடிவம் ஒன்றை அந்த ஸ்பேஸ் ஷிப் இல் வைத்து இருக்கிறார்கள் அதை வைத்து தான் இந்த ஆய்வு செய்கிறார்கள்.
பல முறை தோல்விக்கு பின் வெற்றிகரமாக அது ஆற்றலை உமிழ்கிறது...
அப்படினு.. நினைத்து சந்தோஷ படுவதற்குள் அந்த கருவி over load ஆகி துகள் களை ஆற்றல்களை வெடித்து சித்தறடிக்கிறது.
அந்த கருவி மிக ஆற்றல் வாய்ந்த ஒன்று எந்தளவு என்றால் அது space time யை யே கிழித்து ரியாலிட்டி யை மாற்றி வேற வேற டைம் லைன்களை இணைத்து மல்டி வெர்ஸ என்று சொல்ல கூடிய பல பரிமாணம் கொண்ட வெவ்வேறு இணை பிரபஞ்சம் அல்லது இணை உலகங்களை ஒன்றாக்கி குழப்பம் விளைவித்து விடுகிறது.
விளைவு ? இங்கே செத்தவன் அங்கே உயிரோடு இருக்கான் அங்கே இருந்து ஒருத்தி இங்க வரா... இன்னோரு டைம் லைன்ல உலக போர் அரம்பிக்குது..
இன்னோரு டைம் லைன்ல மான்ஸ்டர் விலங்குகள் எல்லாம் கிளம்புது...
ஏற்கனவே வந்த clover field படங்களின் தொடர்ச்சியாகவும் அதில் நடந்த நிகழ்வுகளுக்கு லாஜிக் சொல்லும் படியாகவும் இருக்கிறது இந்த பார்ட்.
ஆனாலும் பல பரிமாண கலப்பு ..வேற வேற டைம் லைன் இணைப்பு..
மல்டி வெர்ஸ்... ஸ்பேஸ் டைம் ல ஓட்டை னு செம விஷயங்களை கையில் எடுத்து உள்ள இந்த படம் இன்னும் நிறைய விதமாக அதை அறிவியல் கற்பனை காட்சிகள் கொண்டு பிரமாண்டமாக கொடுத்து இருக்கலாமோ என்று படுகிறது.
சாதாரணமான ஆக்ஸன் சண்டைகள் காட்சி அமைப்புகளுக்கு இவ்வளவு அறிவியல் பின்புலம் கொண்ட கதை எதற்கு என்ற கேள்வி வருகிறதே..
சரி இனி வரும் clover field பாகங்கள் அதை பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்...
இந்தியா ஜனநாயக நாடா ?
68 ஆயிரம் காஷ்மீரிகளைக் கொன்ற ஒரு இந்திய ஒன்றியத்தை ஜனநாயக நாடு என்று கூற உரிமையில்லை..
குசராத்தில் 2500 இசுலாமியர்களை இனப்படுகொலைச் செய்த ஒரு நாட்டிற்கு மதசார்பற்ற நாடு என்றும் கூற தகுதியில்லை..
இலங்கையுடன் கூட்டு சேர்ந்து 2 இலட்சத் தமிழர்களை கொன்று குவித்த இந்தியம் அமைதிக்கான தேசமும் அல்ல...
இந்தியன் என்பது அவமானம்..
தமிழன் என்பதே அடையாளம்...
மனம் தான் மனித வாழ்வின் விளைநிலம்...
அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.
மனதை அடக்க நினைத்தால் அலையும்.
அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.
இனி தவறு செய்யக் கூடாது என்று தீர்மானிப்பதும் மனம் தான்.
அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.
குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.
வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.
அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.
அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.
கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.
இன்னும் சொல்லப் போனால் கவலையின் போது பிரச்சனை மேலும் பெரிதாகிவிடும்.
தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.
தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.
திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப் பிடித்தால் போதும்...








