14/05/2017

குற்றாலம் அருவியில் பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண் காவலர்கள், பெண் சுற்றுலா பயணிகள் புகார்...


குற்றாலல் மற்றும் ஐந்தருவிகளில் பெண் சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடங்களில் ஆண் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளது அங்கு வரும் பெண்களிடையே சங்கோஜத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பலர் திரும்பி செல்லும் நிலை ஏற்படுகின்றது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் கருதும் காவல் துறையின் நடவடிக்கை வரவேற்க தக்கது என்றாலும், பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண்களை நிறுத்தியது ஏன் பெண் காவலர்களை நிறுத்தலாமே என கேள்வி எழுப்புகின்றனர் சுற்றுலா பயணிகள்.

குளிக்க சென்ற சுற்றுலா பெண் பயணி ஒருவர் , உங்கள் பெண் உயர் அதிகாரிகள் இங்கு குளிக்க வந்தால் இப்படித் தான் நீங்கள் நின்று பார்ப்பீர்களா ? என கேட்டு போலிசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.