10/07/2017

தமிழ் நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்...


தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.

பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது.

வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது.

செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.

எருமையூர் -மைசூர், (எருமை என்பது வடமொழியில் மகிசம். எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது).

ஒத்தை கால் மண்டபம் - உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.

ஒகேனக்கல் - உகுநீர்க்கல், புகைநற்கல்.

விருதாச்சலம் (வடமொழி) - முதுகுன்றம் (தமிழ்).

வேதாரண்யம் (வடமொழி) -திருமறைக்காடு (தமிழ்).

தி. நகர் என்பது தியாகராய நகர் ஆகும். இதை அனைவரும் அறிந்ததே, (தியாகராயர் - இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

கே.கே நகர் என்பது கலைஞர் கருணாநிதி நகர்.

பாண்டிபசார் - சவுந்தரபாண்டியனார் அங்காடி. ( சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).

மதுரை என்பது மதிரை (மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்).

குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.

திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்.

நீலகிரி - குன்னூர் என வழங்குவது குன்றூர்.

அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது.. (ஆர் என்பது ஆத்தி மரம்).

ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. (காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்).

நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர் சூட்டினார்கள்...

ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.