13/07/2017

தமிழ்த் தேசியமும் சாதிய குழப்பமும்...


தற்போது நம்மை அதிகமாக குழப்பமடையச் செய்யும் கருத்தியல் இதுவேயாகும்.

தமிழ் தேசிய கருத்துக்கள் நாளடைவில் செம்மைபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், திராவிடர்கள் நம்மை பாசிசுடுகள் (Fasists), சாதி வெரியர்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்வதோடு நம்மை பார்ப்பன அடிவருடிகள் என்றும் கூறி தமிழ் தேசியத்தை உருப்பெற செய்யாமல் குழப்பி வருகின்றனர்.

நம்மில் (தமிழ் தேசிய சிந்தனையாளர்கள்) பலர் கூட தமிழர்களை அடையாளம் காண்பதில் சாதியத்தை பார்ப்பது தவறு என்று நம்பி வருகின்றனர். இது ஓரளவுக்கு பொதுவாக தமிழ் தேசிய சிந்தனையாளர்களை சென்றடைந்த கருத்தாகும்.

தமிழர்களை அறிவுசார் தளத்தில் வீழ்த்தியது பார்ப்பனர்கள் (ஆரிய மனுவாதிகள்) என்று இதுவரையில் திராவிடர்கள் நம்மை நம்ப வைதுக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஆரிய மனுவாதிகள் நம்மை அண்டிப்பிழைக்கும் ஒட்டுண்ணிகளே அன்றி நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட வர்க்கம் இல்லை.

இந்த ஒட்டுன்னிகளுடன் உள்ளே வந்த திராவிட (விசயநகர தெலுங்கர்கள்) எதிரிகளே நம்முடைய கோவில்களிலும் வாழ்வியலிலும் ஆரிய தாக்கத்தை உட்புகுத்திய ஆண்டைகளாவர்.

திராவிட வந்தேறிகள் தான் இனக்குழுக்களாக இருந்த நம்மை சாதிகளாக கட்டமைத்தனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலிருந்த தொழிற்சார் குலங்களை வாக்குவங்கிகளாக மாற்ற பெரிய சாதிய கட்டுமானங்களாக உருப்பெற செய்தனர். இதை எடுத்துக் காட்டுடன் சொள்ளவிடின் புரியவைக்க இயலாது.

தற்ப்போது ஆதிக்க சாதிகளாக அடையாளம் செய்யப்படும் வன்னியர்கள் பல வகையான இனக்குழுக்களை கொண்டவர்கள்.

தமிழகம் முழுவதும் பரவலாக வாழ்ந்த்துக் கொண்டிருக்கும் வன்னியர்கள் பல்லி, படையாட்சி, போன்ற உட்பிரிவுகளை கொண்டவர்கள்.

இதுப்போன்றே முக்குலதோர்கள் என்ற பெரிய சாதியப் பிரிவிற்குள் கள்ளர், மறவர், அகமுடையர், போன்ற உட்பிரிவுகள் உள்ளது.

இது போன்றே தமிழகத்தில் உள்ள தமிழ் சாதிகளுள் உட்பிரிவுகள் உண்டு. ஒரு சாதிக்குள் இருக்கும் சாதிய உட்பிரவுகள் யாவும் ஒன்றோடு ஒன்று வரலாற்று தொடர்புடையது அன்று.

ஆனால் இவர்களுக்குள் வரலாற்று தொடர்புடையது போன்ற பிம்பத்தை திராவிடர்கள் தெளிவாக உருவாகினர்.

இந்தியா முழுவதும் சாதிகளுண்டு. ஏன் காந்தி கூட ஒரு சாதிய பெயர் தான்.

நமது பக்கத்துக்கு மாநிலமான கேரளாவிலும் சாதிகள் உண்டு. மேனன், நாயர், என்று தங்கள் பெயருக்கு பின்பு அவர்கள் இன்றளவிலும் பெயரிட்டுக் கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் எங்கேயும் இரு சாதிகளுக்குள் சண்டைகள் பெருமளவில் நடந்ததில்லை. அவர்கள் அனைவரும் இனமாக ஒற்றுமையுடன் இருக்கின்றனர். அங்கேயும் ஆரிய மனுவாதிகள் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றனர்.
இப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் சாதிய பெயர்களும் போடுவதில்லை, இனமாகவும் இருக்கவில்லை. ஆனால் சாதிய சண்டைகள் மட்டும் குறைந்தபாடில்லை.

தமிழகத்தில் ஆரிய மனுவாதிகள் உண்டு கூட ஆதிக்க தெலுங்கு சாதி வெறியர்களும் (திராவிடர்கள்) உண்டு. இவர்கள் தங்களை தமிழகளுக்குள் மறைத்துக்கொள்ள நமது ஓட்டுப் பெயர்களான குலப் பெயர்களை போட வேண்டாம் என புரட்சி செய்துவிட்டு, சாதிய கட்டமைப்புகளிடம் ஓட்டு பொறுக்கி அரசியலை மட்டுமே செய்தனர், செய்கின்றனர்.

இதுவரையில் ஆரிய மனுவாதிகளை மட்டுமே வந்தேறிகளாக பார்த்துக் கொண்டிருந்த நாம் படையெடுத்து வந்த வந்தேறி தெலுங்கர்களை கண்டு கொள்ளவில்லை.

ஆரியர்களுக்கு எதிராக புரட்சி செய்த திராவிட கழகங்கள் (100) ஆண்டுகள் ஆகியும் தமிழக அளவில் ஆரியத்தை வீழ்த்த முடியவில்லை, ஏனெனில் அவர்கள் ஆரியத்தை எதிர்க்கவே இல்லை.

படையெடுத்து வந்த வெள்ளையனை அந்நியன் என சொல்லிய நாம் ஏன் அதற்குமுன் படையெடுத்து வந்த தெலுங்கர்களை அந்நியர்களாக பார்ப்பதில்லை?

ஆகவே தெரிந்தோ தெரியாமளோ தூய தமிழர்களை அடையாளப் படுத்துவதற்கு சாதிய ஒட்டுகள் தேவைப்படுகிறது.

சாதிக்கு எதிராக புரட்சி செய்த திராவிடர்கள் FC, MBC, BC, SC, ST என்ற மாடர்ன் வர்நாசுரமத்தை ஏன் எதிற்க்கவில்லை?

விழித்தெழுங்கள் தமிழர்களே..
சாதி தமிழ் தேசியத்திற்கு ஒரு தடையில்லை..

ஆகையால் சாதிகளை தாக்கவும் தேவையில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.