08/08/2017

புலிகள் சிறைமீட்ட பெண்...


1983 யூலை 25ல் கறுப்பு யூலையின் உச்சக்கட்டகொலை நடந்த நாள்...

வெளியே குடும்ப அட்டைகளை கையில் வைத்துக்கொண்டு சிங்களவர்தமிழரை வேட்டையாடிக் கொண்டிருக்க.. அன்று வெலிக்கடை சிறையில் இருந்த சிங்களக் கைதிகள் மதிய உணவுக்குப் பிறகு திடலில் (சிங்கள) சிறையதிகாரிகளால் ஒன்று கூட்டப்பட்டனர்..

அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டு தமிழ்க்கைதிகள்இருந்த கூடம் நோக்கி சென்றனர்..

சிங்கள மக்கள்வாழ்க, புலிகளைக் கொல்லுங்கள், என்று சிங்களத்தில்
முழக்கமிட்டபடி சிறைக் காவலர்களால்
வழிநடத்தப்பட்டு கதவுகள் திறந்துவிடப்பட்டு அந்தகொலைக்கூட்டம், ஏற்கனவே (மாலை மது அருந்திவிட்டு வரும்) சிறையதிகாரிகளால் நாள்தோறும் கொடுமைப்படுத்தப்பட்டு உடல்நலம் சிதைந்து போயிருந்த ஆயுதமில்லாத
தமிழ்க் கைதிகளைக் வெட்டியும் குத்தியும் அறுத்தும்கொன்றனர்..

இதில் குட்டிமணி இறந்தபிறகு தமிழீழத்தைப் பார்ப்பேன்என்று கண்தானம் செய்திருந்தார், உயிருடனே அவர்கண்களை நோண்டி பிறகு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

மொத்தம் 34பேர் கொல்லப்பட்டு உடல்களும்
துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அங்கிருந்த புத்தர்சிலைமுன்பு படையல் போடப்பட்டது.

ஒரு சாண்அளவு அங்கே குருதி தேங்கியிருந்தது, நள்ளிரவு வரை இக்கோரதாண்டவம் நடந்தது.

பிறகு சிங்கள அதிகாரி அக்கைதிகளைப்
பாராட்டி உரையாற்றினார்..

பி3, டி3 கூடங்களில்இருந்த  தமிழ்க் கைதிகளும் கொல்லப்பட்டுவிட, சி3ஐ நாளை பார்த்துக்கொள்ளலாம்அதுவரை ஓய்வெடுக்குமாறு கூறினார்.

வெளியிலிருந்து சரக்குந்து (லாரி)வந்து அத்தனை உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன.

துப்புரவுப்பணி முடிந்ததும்அதிகாலை ஒரு (சிங்கள) நீதிபதி வந்து சி3தமிழ்க் கைதிகளை விசாரித்தார்..

தமிழ்க்கைதிகள்துணிந்து நடந்ததைக் கூறினர். பிறகு,இவ்வாறு இனி நடக்காது என்று கூறிவிட்டுச்சென்றார்..

27-7-89 அன்று மீண்டும் இதேபோல்
கொலைத்திட்டம் நிறைவேறியது, ஆனால், தமிழ்க்கைதிகள்எச்சரிக்கையாக இருந்தனர்.

தமது போர்வைகளை சுருட்டி கதவில் கட்டி இறுக்கிப்பிடித்து திறக்க முடியாது செய்து கொண்டு,தீட்டி வைத்திருந்த தட்டு கரண்டி, கழிவறை வாளி,மேசை போன்றவற்றை பயன்படுத்தி தாக்கினர்.

சிறுநீரையும் குழம்பையும் வைத்திருந்தனர்
அதை சிங்களவர்கள் கண்களில் ஊற்றினர்;
மூன்று மூன்று பேராக அடைக்கப்பட்டிருந்த
37கைதிகள் ஆயிரம் சிங்களவரை சமாளித்தனர்.

சிலசிங்களக்கைதிகள் தப்பியோட முயற்சிக்கசிறையதிகாரிகள் கலவரத்தை நிறுத்த முயன்றனர்;அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது; காயம்பட்ட தமிழர்கள் மருத்துவமனையில் சிங்கள
மருத்துவராலும், தாதியராலும் பரிகசிக்கப்பட்டனர்.

இரண்டாம் தாக்குதலில் மொத்தம் 18பேர் இறந்தனர் 19பேர் பிழைத்தனர்.

புலிகளுக்கு அடைக்கலம்கொடுத்ததற்காக சிறையிடப்பட்ட 'நிர்மலா'பெண் கைதிகளுடன் இருந்ததால் அவரை கவனிக்கவில்லை.

நிர்மலா என்பவர் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்ட மனிதவுரிமை செயல்பாட்டாளர்'ராஜினி' என்பவரின் உடன்பிறந்தவர்.

தமிழ்கைதிகள்மட்டகளப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர்;

23-9-83அன்று பல்வேறு இயக்கங்கள்
சேர்த்து முயற்சித்து நிர்மலா தவிர 60 தமிழர்கள்தப்பினர்.

பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டநிர்மலாவை புலிகள் கேணல்.பிரான்சிசு என்பவர்
தலைமையில் பஷிர், சிவம், டேவிட் மற்றும் சிலர்அடங்கிய அதிரடிக் குழு 15-6-84 அன்று மீட்டனர்.

சிறையின் வெளிக்கதவைத் தட்டி காவல் சீருடையில்ஒருவர் புதியகைதிகளைக் கொண்டு வந்திருப்பதாகசிங்களத்தில் கூற கதவு திறக்கப்பட்டது.

அதிரடியாக உள்ளே நுழைந்த புலிகள்
துப்பாக்கி வேட்டுச்சத்தம் கேட்டால் காவலர்கள்சூழ்ந்து விடுவார்கள் என்று அடிதடியின்மூலமே காவலர்களைத்தாக்கி கதவுகளை உடைத்து நிர்மலாவை அழைத்துக் கொண்டுவெளியேறினர்.

பிறகு நிர்மலா தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுதிரு.புலமைப்பித்தன் வீட்டில் தங்க வைக்கப்பட்டார்.

இன்று நிர்மலா மனிதவுரிமை மற்றும்
பெண்ணுரிமை செயல்பாட்டாளராகவும் புலிகளையும்சிறிலங்காவையும் ஒருசேர விமர்சிப்பவராகவும்ஆகிவிட்ட போதிலும், அன்றைய காலத்தில்ஒரு தோட்டாவைக்கூட தீர்க்காமல் புலிகள் செய்த இந்தசாதனை சிங்கள மக்களுக்கு அதிர்ச்சியாகவும்
பதிலடியாகவும் தோன்றியது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.