29/08/2017

டெல்லி இடைத் தேர்தலில் பாஜக வேட்பாளரை அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த ஆம்ஆத்மி வேட்பாளர்...


டெல்லியில் நடைபெற்ற பவனா இடைத் தேர்தலில் 24 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஆம் ஆத்மி வேட்பாளர் ராம் சந்ரா வெற்றி பெற்றுள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பாஜக விட குறைவான வாக்குகளை பெற்று காங்கிரஸ் 3 வது இடத்திற்கு சென்றது.

பவனா தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளராக இருந்த பிரகாஷ் என்பவர் பாஜகவில் சேர்ந்ததால் இந்த தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. மேலும பிரகாஷ் யே பாஜக வேட்பாளராக பாஜக கட்சி இந்த முறை இடைத் தேர்தலில் நிறுத்தியது.

எனினும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜகவிற்கு சென்றதால் இருந்த எம்எல்ஏ பதியை பிரகாஷ் இழந்துள்ளார் என பிற கட்சி பிரமுகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது வெற்றிபெற்றுள்ள ஆம் ஆத்மி வேட்பாளர் ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர் ஆவார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.