14/08/2017

ONGC குழாயில் எரிவாயு கசிவு, பொதுமக்கள் அதிர்ச்சி...


நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் இன்று காலை ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எரிவாயு கசியத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும், குழாய்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

கசிவை தடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் குழாய்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.