04/10/2017

குலக்கல்வி என்ற அவதூறு...



ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பக்  கூறிக் கொண்டே இருந்தால் அது காலப்போக்கில் உண்மையாகி விடும் என்பது கோயபல்ஸ் பரப்புரை அரசியல் உத்தி ஆகும்..

இராஜகோபாலாச்சாரி மீது பரப்பப்பட்ட அவதூறுகள்..

1)இராஜாஜி குலக்கல்வியைக் கொண்டு வந்தார்.

2)நிதி பற்றாக்குறையைக் காரணம் காட்டி 600 பள்ளிகளை மூடினார்.

3)பிராமணருக்கு வேத பாடசாலைகளைத் திறந்தார்.

மூன்றுமே வடிகட்ட பொய்கள்..

முதல் பொய் இராசாசி குலக்கல்வியைக் கொண்டு வந்தார் என்பது.

அவர் பார்ப்பனராம், மனிதர்கள் எந்த குலத்தில் பிறந்தார்களோ அந்த அந்த தொழிலைச் செய்யவேண்டும் என்று மனுதர்மம் கூறுவதை நடைமுறைப்படுத்தப் பார்த்தாராம்.

உண்மை என்ன வென்றால் அது இராசாசி வகுத்த திட்டமே கிடையாது.

அதிலே குலம் பற்றி எதுவுமே விதிகள் இல்லை.

அவர் செய்தது நேரச் சீர்திருத்தம் மட்டும்தான்.

Hereditary Education Policy என்ற இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் ஆட்சியில் சில பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது.

அதை தமிழகம் முழுவதும் இராசாசி நடைமுறைக்குக் கொண்டு வந்தார்.

ஆசிரியர்கள் அப்போது குறைவு.

புதிய ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் பணமில்லை.

அதனால் ஆசிரியரின் 8 மணிநேர வேலை நேரத்தை ஒவ்வொரு வகுப்பிற்கும் மூன்று மூன்று மணி நேரமாக பிரித்துக் கொடுப்பது தான் திட்டம்.

சாதி பற்றியோ பிறப்பு பற்றியோ எதுவுமே கூறப்படவில்லை.

இத்திட்டத்தால் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்தது.

மூன்றுமணி நேரம் போக மீதி நேரம் மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று ஒரு பேட்டியில் கேட்டார்களாம்.

இராஜாஜி மீதி நேரங்களில் பெற்றோருக்கு உதவி செய்யலாம் என்று கூறினாராம்.

இதை அண்ணாதுரை பிடித்துக் கொண்டு 'பெற்றோரின் வேலையைத் தான் பிள்ளைகள் செய்யவேண்டும் என்று பார்ப்பனர் இராசி கூறிவிட்டார்' என்று அவதூறு பரப்பினார்.

இதற்கு 'குலக்கல்வித் திட்டம்' என்று பெயர் சூட்டி திராவிடவாதிகள் பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இன்றுவரை இந்தப் பொய்ப் பெயரால் தான் இந்தத் திட்டம் அறியப்படுகிறது.

600 பள்ளிகளை அவர் மூடினார் என்பதும் பச்சைப்பொய்.

அன்று கல்வி சேவை செய்யும் சில கிராமிய அமைப்புகளைக்கு அரசு நிதி கொடுத்துவந்தது.

அந்த நிதி முறையற்ற வகையில் செலவு செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அதை இராசாசி நிறுத்தக்கூட இல்லை.

அது சரியாக நடக்கிறதா என்று முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.

ஆந்திராவுக்குக் கிடைக்கும் நிதி போய்விடுமோ என்ற பயத்தில் நீதிக்கட்சி எனும் திராவிடக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.

உடனே ஈ.வே.ரா, ஆந்திராவில் இந்த நிதி இல்லாமல் போனால் 600 'பள்ளிகள்' மூடவேண்டி வரலாம் என்று உண்மைக்குப் புறம்பாக எழுதினார்.

அதையும் கோயபல்ஸ் பரப்புரை செய்து வருகின்றனர்.

நன்றி : எழுத்தாளர் .திரு. ஜெயமோகன்...

அன்று இராசாசி எதைச் செய்தாலும் திராவிடவாதிகள் அதை எதிர்த்தனர்.

எடுத்துக்காட்டாக..

அன்று அவர்அரும்பாடு பட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார்.

உடனே ஈ.வே.ரா முழுமூச்சாக குடிக்கும் உரிமை கேட்டு மது ஆதரவுப் பிரச்சாரம் செய்தார்.


25 ஆண்டுகள் குடியை மறந்திருந்த திராவிடம் மீண்டும் சாராயக்கடைகளைத் திறந்தது.

திராவிடம் என்பது அன்றைய ஆங்கிலேய ஆட்சியின் B-அணி ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.