23/11/2017

ஒரு வருடமாக சம்பளம் கிடைக்காததால், தலைமையாசிரியர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி...


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பள்ளத்தூர் அழகம்மை ஆட்சி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக புஷ்பநாதன். இவருக்கும் அப்பள்ளியின் தாளாளருக்கும் இடையே நீண்ட நாள்களாகப் பள்ளியின் உரிமை யாருக்கு என்கிற உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக கடந்த ஒரு வருடமாக இவருக்கு கடந்த ஒரு வருடமாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வருகிறார்கள், இதனால், தனது குடும்பச்செலவுக்கும், பிள்ளைகளின் படிப்பு செலவுக்கும் மிகவும் திண்டாடியுள்ளார்.

இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர், இயக்குநர், மாவட்டக் கல்வி அதிகாரி, தொடக்க கல்வி அதிகாரி, மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை அனுப்பியும் நியாயம் கிடைக்காததால், மனம் வெறுத்து போய், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். உடனடியாக போலீஸார் காப்பாற்றி, விசாரணை நடத்தி வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.