27/12/2017

கலெக்டர் ஆக ஆசைப்பட்ட 11 வகுப்பு மாணவியை தனது சைரன் பொறுத்திய காரில் அமர வைத்து ஊக்கப்படுத்திய திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி...


அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மொனிஷா 10 ஆம் வகுப்பில் 491 மதிப் பெண் எடுத்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கலெக்டரிடம் நான் உங்களை போன்று கலெக்டர் ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தனது காரில் அந்த மாணவியை அமர வைத்து கலெக்டர் காரின் வெளியே நின்று கொண்டு புகைப்படம் எடுக்குமாறு கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்க வேண்டும் நானும் அரசு பள்ளியில் படித்தவன் தான் என கலெக்டர் கூறி சென்றது அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.