27/01/2018

கடலூரில் ஓசியில் வாழைப்பழம் தர மறுத்த திருநங்கையை தாக்கிய திமுக பிரமுகர்கள்...


கடலூர் மொழிப்போரில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வருடந்தோறும் ஜனவரி 25ந் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

தமிழுக்காக மாணவர் ராசேந்திரன் உயிரைக் கொடுத்த வீரமண்ணான கடலூர் மாவட்டத்தில் வீரவணக்க நாள் உரையாற்ற மு.க ஸ்டாலின் கடலூர் மஞ்சை நகர் திடலுக்கு நேற்று (ஜனவரி 25-ம் தேதி) மாலை வந்திருந்தார் தலைவரே வருங்கால முதல்வரே வருக என வண்ண பேனர்களால் அலங்கரிக்கப்பட்டு உற்சாக வெள்ளத்தில் உரையாடிய திமுக ஸ்டாலின்..

ஜனவரி 26-ம் தேதி காலை சிதம்பரம் தில்லை நகரில் முன்னாள் சட்டமன்ற கொறடாவும் கழகத்தின் முன்னோடியான மருதூர் இராமலிங்கம் இல்லத் திருமண விழாவைத் தலைமையேற்று நடத்த இருக்கும் நிலையில் சில திமுக பிரமுகர்கள் குடிபோதையில் சுமங்கலி துணிக்கடை அருகில் உணவு அருந்திவிட்டு தள்ளுவண்டியில் ஓசியில் வாழைப்பழம் கேட்டு தகராறு செய்தனர் தர மறுத்த திருநங்கையை அடித்து உதைத்து தாக்கி உள்ளனர். திமுக பிரமுகர்கள் பிறகு மின்னல் வேகத்தில் சிதம்பரத்தை நோக்கி சென்றனர்.

காவல் துறைக்குத் தகவல் தருவதற்காக திருநங்கை முயற்சி செய்த போது கைபேசியை தூக்கிச் சென்றனர் காரில் வந்த பிரமுகர்கள். பழக்கடை முன் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஒன்று கூடியதால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.