28/01/2018

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அறிவிப்பு...


தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபகாலமாக ATM கார்டு மோசடி குற்றங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

பொதுமக்களின் செல்போன் எண்ணிற்கு வங்கி/ இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் போல் அழைப்பு விடுத்து ATM கார்டு காலாவதியாகவுள்ளதாகவும், அதனை புதுப்பிக்க ATM கார்டின் 16 இலக்க எண்ணை கூறுங்கள்  என்றும், ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்றும், இன்சூரன்ஸ் போனஸ் தொகை பெறுவதற்கு என்றும் கூறி ஆதார் எண், வங்கி கணக்கு எண், ATM கார்டு எண் மற்றும் இரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை லாவகமாக பெற்று மோசடி செய்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து வங்கி மேலாளர்களுக்கு தங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு குறிப்பாக கிராமப்புற மற்றும் பாமர மக்களுக்கு இது போன்ற மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க தமிழில் குறுஞ்செய்தி அனுப்பியும் மற்றும் பொதுமக்களிடையே காவல்துறையினருடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை சார்பில் அந்தந்த உட்கோட்ட அதிகாரிகள் மற்றும் காவல் நிலைய ஆய்வாளர்கள் மூலமும் வங்கி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் இதுபோன்ற மோசடி செல்போன் தொலைபேசி அழைப்புகளுக்கு அல்லது இனந்தெரியாத நபர்களிடம் தங்களை பற்றிய குறிப்புகள், தங்களது வங்கி கணக்கு மற்றும் கிரெடிட்/ டெபிட் கார்டு விபரங்களை தெரிவிக்காமல், இரகசியமாக வைத்திருக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.மகேந்திரன் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.