05/01/2018

பிரித்தானியாவில் வீசிய எலினோர் (Storm Eleanor) புயலினால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு...


பிரித்தானியாவை தாக்கிய எலினோர் சூறாவளியினால், சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை அச்சுறுத்தி வந்த எலினோர் புயல் பல பகுதிகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில் வட அயர்லாந்தில் குறித்த புயலின் தாக்கத்தினால் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் வட அயர்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தின் தென்மேற்கு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காற்று 145 கிலோ மீற்றர் வேகத்தில் வீசத் தொடங்கியுள்ள நிலையில், மக்களை அவதானமாக இருக்குமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த புயலின் சீற்றத்தினால், போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.