04/02/2018

வாகன ஓட்டிகளை தாக்கி பணம் பறித்த சிறப்பு எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட்....


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ முருகன் மற்றும் ஆயுதப்படை போலீசார் சுரேஷ், அய்யனார் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வானூர் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பைக்கில் வந்தவர்களிடம் வழக்குபோடாமல் பணத்தை கேட்டு மிரட்டி அதனை பெற்றுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனைத் தொடர்ந்து இந்த புகாரில் சிக்கிய சிறப்பு எஸ்ஐ முருகன் உள்ளிட்ட 3 பேரையும் விழுப்புரம் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். மேலும் துறைரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார். விசாரணை முடிந்து எஸ்பியிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் சிறப்பு எஸ்ஐ முருகன், போலீசார் சுரேஷ், அய்யனார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.