19/02/2018

பிறந்த நாள் கொண்டாட்டம் ரவுடிக்கு கேக் ஊட்டிவிட்ட இன்ஸ்பெக்டர் கருணாகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - சேலம் ஆணையர் அதிரடி...


சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுசீந்திரன் மீது பல்வேறு கொலை கொள்ளை வழக்குகள் உள்ளது. இவர் ஒரு ரவுடி. போலிசை கைக்குள் வைத்துக் கொண்டு பல்வேறு காரியங்களை செய்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ரவுடி சுசீந்திரனின் பிறந்த நாளை கொண்டாட தனது வீடிட்டிற்கு அழைத்த இன்ஸ்பெக்டர் கருணாகரன் சுசீந்தரனுக்கு தனது கையால் கேக் உட்டி விட பதிலுக்கு சுசீந்தரன் இன்ஸ்பெக்டருக்கு கேக் ஊட்டிவிட என ரவுடிகளுடன் அமக்கலப்படுத்தியுள்ளார் இன்ஸ்பெக்டர் கருணாகரன்.

இதன் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து சேலும் ஆணையர் சங்கர் கருணாகரனை இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

முழு விசாரனை முடிந்த பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.