27/05/2018

அறிவு சார் தளங்களில் தமிழர்கள்...


ஸ்டெர்லைட் வேதாந்தா பிரச்சினையை தமிழ்நாடு இந்தியா என்று குறுகிய எல்லைக்குட்பட்டு வெறுமனே அரசியல் பிரச்சினையாக மட்டும் சுருக்காமல்

வணிக ரீதியாக சர்வதேச பங்குச் சந்தை மற்றும் அனில் அகர்வால் வசிக்கும் பிரித்தானியாவில் போராட்டங்கள் கூடவே பிரித்தானிய எதிர்கட்சியை பேச வைத்து இந்த பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக்கி வணிக ரீதியாக அனில் அகர்வாலை தாக்கும் சரியான உத்திகளை கையாண்டு கொண்டிருக்கும் உலக தமிழர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

காசிருப்பதால் எடப்பாடிகளையும் நாய் போலீசையும் மோடிகளையும் விலைக்கு வாங்கி தான் நினைத்ததை சாதித்து விடலாம் என்று எளிமையான கனவு காண்பவனுக்கு போராட்டங்களைத் தாண்டி உன்னைய எங்க அடிச்சா உனக்கு எப்படி வலிக்கும் என்று புரிய வைத்துக் கொண்டிருக்கும் அறிவு சார் தளங்களில் இயங்கும் தமிழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

போராட்டங்கள் என்னும் ஜனநாயக வழி மட்டுமல்ல. அறிவு சார் ஆயுதங்களையும் தூக்குவதிலும் தமிழர்கள் எடுத்துக்காட்டு தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.