16/09/2018

தீட்சைகள்...


காய சித்தி என்னும் உடல் தூய்மையடைய பத்துவிதமான தீட்சைகள் கூறப்படுகின்றன. சுத்தி முறைகளே தீட்சை என்று கூறப்படுகிறது.

1. மயிர்க்கால் வழியே துர்நீர்களைக் கழியச் செய்தல்.

2. வாத, பித்த, ஐய குற்றங்களை நீக்குதல்.

3. கெட்ட குருதியைக் கசியச் செய்தல்.

4. உடல் சட்டையைக் கழட்டுதல்.

5. மயிர் கறுத்தல். பஞ்சபூதம் வசமாதல்.

6. சுழுமுனை திறந்து தூர திருட்டி வசமாதல்.

7. உடல் சோதி வடிவமாகிப் பிரகாசித்தல்.

8. உடல் காற்றாக மிதத்தல், கூடுவிட்டுக் கூடு பாய்தல்.

9. எட்டு சித்திகள் அடைதல்.

10. உடல் ஒளிவடிவமாதல்.

மேற்கண்ட பத்துவிதமான சுத்திகளையும் அடையச் செய்யும் மருந்துகள் மூன்று. அந்த மருந்தே வீர மருந்து, விண்ணோர் மருந்து, நாரிமருந்து என்னும் கற்பங்களாகும்.

அவை முறையே கற்பம், யோக கற்பம், ஞான கற்பம் என்பனவாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.