13/02/2019

திருப்பதி லட்டுவில் இனி ஆவின் நெய்...


மக்கள் மத்தியில் பிரசித்து பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம். இந்நிலையில் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க 7 லட்சத்து 24 ஆயிரம் கிலோ நெய் கொள்முதல் செய்ய திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. நெய்யின் தரம் மற்றும் விலையின் அடிப்படையில் லட்டுக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.23 கோடி மதிப்பிலான நெய் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. 2003-2004ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்துக்கு நெய் வழங்க ஆவின் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தற்போது மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.