08/03/2019

தமிழ் தந்த சிறப்பு நன்னூல்.. நன்னூல் தமிழுக்கு தந்த சிறப்பு...


இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட "நன்னூல்" எனும் நூலில் தமிழ் எழுத்துக்கள் உடலில் எந்த இடத்தில பிறக்கிறது?

பிறந்த எழுத்தை ஒலிக்க எந்த உறுப்பு துணை புரிக்கிறது ?

துணை புரியும் உறுப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை படித்து அதிர்ச்சி அடைந்தேன்..

தமிழ் எழுத்துக்கள் உடலில் மார்பு, கழுத்து, தலை, மூக்கு, ஆகிய நான்கு இடங்களில் பிறக்கிறது.

இதை ஒலிக்க உதடு, நாக்கு, பல், அண்பல் (அதாவது மேற்பல் வரிசையின் அடிப்பகுதி ) அண்ணம் ( வாயின் மேல்பகுதி ) பயன்படுகின்றது, அங்காத்தல் ( வாய் திறத்தல் ) , உறல் ( பொருந்துதல் ), வருடல் ( தடவுதல் ), ஒற்றுதல், குவிதல், என்று செயல்படுகின்றது என விவரிக்கிறது..

அ,ஆ எனும் முதல் இரு எழுதும் கழுத்துப் பகுதியில் காற்று வெளிப்பட்டு - வாய் ஒலிப்பு உறுப்பாகி, வாய் திறத்தல் எனும் செயல்பாட்டில் பிறக்கின்றது..

இ,ஈ,எ,ஏ,ஐ ஆகிய ஐந்து உயிர் எழுத்தும், கழுத்துப் பகுதி காற்று பிறப்பிடமாகி,  வாய், அண்பல், அடிநாக்கு ஒலிப்பு உறுப்பாக, திறத்தல்-உறல் (பொருந்துதல்) செயலால் எழுத்தாகி ஒலிக்கிறது...

உ,ஊ,ஒ,ஓ,ஒள ஆகிய ஐந்து உயிர் எழுத்தும் கழுத்தில் காற்று பிறப்பிடமாகி, ஒலிக்க உதடுகள் பயன்பட, குவிதல் செயல் மூலமாக பிறக்கின்றன..

தமிழ் எழுத்துகளுக்கு எத்தனை சிறப்புக்கள் என்று பாருங்கள் ?

உலகில் வேறு ஏதாவது மொழிக்கு இந்த சிறப்பு உண்டா ?

இன்னும் என்ன தயக்கம் தமிழை பெருமையாய் பேச ?

தமிழரின் சாதனைத் தேடல் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.