12/04/2019

பெற்றோர்கள் சம்மதிக்காததால் காதலியுடன் விஷம் குடித்த மணமகன் கும்பகோணம் அருகே பரபரப்பு...



தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அரித்துவாரமங்கலம் அருகே உள்ள மருவத்தூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆசைமணி. இவரது மகள் ஈஸ்வரி(27). பட்டதாரி. அதே பகுதியை சேர்ந்த மணி மகன் அருண்குமார்(28). கூலி தொழிலாளி. இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்நிலையில் அருண்குமார், ஆசைமணி வீட்டுக்கு சென்று ஈஸ்வரியை பெண் கேட்டுள்ளார். அவர்கள் பெண் தர மறுத்து விட்டனர். இந்நிலையில் அருண்குமாருக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர். நாளை அருண்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் அருண்குமாருக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு அருண்குமாரும், ஈஸ்வரியும் சந்தித்து பேசினர். அப்போது விரக்தியில் இருந்த இருவரும் திடீரென விஷம் குடித்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு காதலர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அரித்துவாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.