16/04/2019

துலாபாரத்தின் போது தராசு உடைந்ததில் திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் படுகாயம் அடைந்தார்...


திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் சசி தரூர். இவர், அங்கு தம்பானூரில் உள்ல கந்தாரி அம்மன் கோயிலில் இன்று எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக வந்தார். அப்போது துலாபாரத் தராசின் ஒரு பக்கத்தில் வாழைப்பழங்களும் மறுபக்கம் அவரும் உட்கார்ந்தனர். அப்போது அவர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்தது. இதில் சசிதரூரின் தலையின் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது காலிலும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.