06/04/2019

பிரசாரத்தில் நிதானம் இன்றி உளறி கொட்டிய பிக்பாஸ் பிரபலம்.. தொண்டர்கள் அதிருப்தி...


லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. அதிமுக மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. ஜெயலலிதா காலம் முதலே அதிமுக.,வுக்கு நட்சத்திர பேச்சாளர்கள் நிறைய பேர் உள்ளனர். இப்போதும் அது தொடர்கிறது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு பா.ம.க., வேட்பாளர் ஜோதி முத்துவை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறும்போது, மீண்டும்  நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் என்பதற்கு பதிலாக  மீண்டும் மோடியை முதல்வராக்குவோம் என்று கூறினார்.

இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர். இது அக்கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே ஏமாற்றத்தை உண்டாக்கியது.

மேலும் மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செய்ததாக கூறி இருந்தார்.இது பா.ஜ.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 ஏற்கனவே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பா.ம.க., வேட்பாளரை ஆதரித்து பேசும்போது, மாம்பழத்திற்கு பதில் ஆப்பிள் என்று கூறி  இருந்தார்.  இப்போது கஞ்சா கருப்புவும் உளறி கொட்டி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.