26/06/2020

Healer Baskar அவர்களின் கடிதம்...


CORONA..... கொரோனா.....

உலகை ஆளும் சிலர்,

அவர்களுக்கு பிடித்ததுபோல் இந்த உலகத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு "கோராணா" என்ற சாதாரண வைரஸை கருவியாக பயன் படுத்துகிறார்கள்.

அவர்கள் அவர்களுக்கு பிடித்ததுபோல் இந்த உலகத்தை மாற்றிய பிறகு தான் நம்மை ரிலீஸ் செய்வார்கள். ( உதாரணமாக. கட்டாய தடுப்பூசி... RF CHIP... மக்கள் தொகை குறைப்பு.... அனைத்து நாட்டு கம்பெனிகளையும் முக்கிய நபர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்... அவர்களுக்கு பிடிக்காதவர்களை தீர்த்துக் கட்டுதல்.. அனைத்தையும் தனியார்மயமாக்குதல்.. Ect..)

அவர்களின் உண்மையான திட்டம் நமக்கு இப்பொழுது தெரியாது.

நாம் யூகிக்கலாம், ஆனால் அதற்கும் உண்மைக்கும் நிறைய வேறுபாடு இருக்கும்.

அவர்களின் திட்டம் அவர்களுக்கே வெளிச்சம். தேவைப்பட்டால் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

கோராணாவுடன் வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்கள். எனவே இனிமேல் இந்த வைரஸ் பல வருடங்களாக நம்முடன் பயணிக்க போகிறது என்பது தெரியவருகிறது.

காத்திருப்போம்.

கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்

கோரானா என்பது ஒரு சாதாரண வைரஸ். இது கண்டுபிடித்து பல வருடங்கள் ஆகிறது. சளி காய்ச்சல் வரும்பொழுது அனைவருக்கும் இது வரும். இதனால் கண்டிப்பாக உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் சிலர் ஆபத்து என்று பொய் சொல்லி ஏதோ நாடகம் நடத்துகிறார்கள்.

எனவே கோரானா வைரஸை பற்றி பயப்படத் தேவையில்லை தைரியமாக இருக்கலாம்.

இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விடுவொம் என்று சொல்வது உலகமகா காமெடி. இதற்கு தடுப்பூசி தேவையே இல்லை, ஏன் என்றால் அந்த வைரசால் ஆபத்து இல்லை.

மருந்தே தேவையில்லை என்று சொல்லும்பொழுது தடுப்பூசி எதற்கு.

உண்மையைச் சொல்பவர்களை சமூக விரோதி, தேசத்துரோகி, போலி டாக்டர், கிறுக்கன், முட்டாள், பைத்தியம் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். போலி வழக்கு தொடுக்கிறார்கள். பழி வாங்குகிறார்கள்.

இப்பொழுது வைரசால் இறந்ததாகச் சொல்லப்படும் அனைவரும் உண்மையில் வைரஸால் இறக்கவில்லை. அனைவரும் பயத்தால், தவறான வைத்தியத்தால், மற்ற வியாதிகளால், தனிமையால், விரக்தியால், துன்பத்தால், கடன் கொடுமையால், வருமானம் இல்லாததால், வாழ்வாதாரம் இல்லாததால், உறவுகளை பிரிந்ததால், செலவுக்கு காசு இல்லாததால், வறுமையால், வேலை பறி போனதால், மாஸ்க் அணிந்து ஒரே காற்றை சுவாசிப்பதால், வென்டிலேட்டர் பயன்படுத்தியதால், காதலன் காதலியை பார்க்க முடியாததால் இப்படி பல காரணங்களால் மட்டுமே இறந்திருக்கிறார்கள்.

நாம் மன தைரியமாக இருந்தால் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்கலாம்.

இது ஒரு 3 ம் உலக சைக்காலஜிக்கல் போர்.

பிரார்த்தனை செய்வோம்.

ஊரடங்கு முடிந்து முழுமையாக இயல்பு நிலை திரும்ப  சுமார் ஒரு வருடம் ஆகும்.

அதுவரை செலவுகளை மிக மிக மிக மிக குறைக்க வேண்டும்.

பழைய வேலை, பழைய வியாபாரம், பழைய சம்பளம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

இன்று முதல் ஏதாவது ஒரு வேலை செய்து எப்படியாவது சம்பாதிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

இப்படி எல்லாம் சம்பாதிக்க முடியுமோ நல்ல வழியில் சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும்.

மனதை திடமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்

அரசாங்கம் சொல்லும் விஷயங்களை முரண்பட்டு சண்டை போடக்கூடாது.

அரசாங்கம் சொல்வதை கேட்பதுபோல் நடித்துவிட்டு நாம் நூதனமாக தப்பித்துக் கொள்ள வேண்டும்.

பணம் தேவைப்பட்டால் நம்மிடம் உள்ள எல்லாப் பொருள்களையும் விக்கலாம்.

இந்த நேரங்களில் கவுரவம், வசதி, அந்தஸ்து மரியாதை இது போன்ற விஷயங்களை பார்க்க கூடாது.

ஒரு கதை சொல்லட்டுமா

ஒரு காட்டில்  ஒரு சிறுத்தை, வானம் "நீலமாக" இருக்கிறது என்று கூறியதாம்.

அதே காட்டில் ஒரு கழுதை வானம் "பச்சையாக" இருக்கிறது என்று கூறியதாம்.

இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. உடனே சிங்க ராஜாவிடம் நீதி கேட்டு சென்றனர்.

சிங்கம், சிறுத்தையை சிறையிலடைத்தது.

சிறுத்தைக்கு ஏன் தண்டனை என்று சிங்கத்திடம்
அனைத்து விலங்குகளும் கேட்டன.

சிங்கம் கூறியது : கழுதையிடம் வாக்குவாதம் செய்த குற்றத்திற்காக தண்டனை கொடுத்தேன் என்றது.

ஏனென்றால் சிங்கம் சொந்தமாக எந்த முடிவும் எடுக்க முடியாது. நரிகளின் கை பொம்மை தான் சிங்கம்.

சிறுத்தைகள் கூறும் உண்மையை வனவிலங்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எப்படியாவது கழுதைகளுக்கும் சிங்கத்துக்கும் புரியவைத்துவிட்டால் , காட்டை நரிகளிடமிருந்து காப்பாறிவிடலாம்.

கதை முடிந்தது.

தமிழ் காட்டு சிறுத்தைகள் :
1. ஹீலர் உமர்பாரூக்.
2. சரவணா பரமானந்தம்.
3.  Dr. கோ. பிரேமா MD ( Hom )..
4. டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான்.
5. மா. செந்தமிழன்.
6. Dr.M.S.Jackson. MBBS.
7. வாரண்ட் பாலா
8. ஜோக்கர் டிவி.
9. ஆசான் ஜீ
Ect....

கர்நாடக சிறுத்தை : B M HEDGE

வட இந்தியா சிறுத்தை : Dr. Biswaroop Roy
 chowdhury.

ஹரியானா  சிறுத்தை : ஆஷிஷ் puniya.

ஜெர்மனி சிறுத்தை  : Dr Wolfgang wodarg

தான்சானியா சிறுத்தை பிரதமர் ஜான் மகுபுலி.

பிரேசில் சிறுத்தை அதிபர் Jair Bolsonaro.

மைசூர் சிறுத்தை Dr.Kadhar

அமெரிக்க சிறுத்தைகள் :
1. Dr. Andrew Kaufman
2. Dr. Rashid Buttar author of book.
 “The 9 Steps to Keep the Doctor Away”
3.Dr. Knut M. Wittkowski, former head of biostatistics, epidemiology and research design at Rockefeller University.
4. DR. Judy Anne Mikovits .

நரிகளை வெல்வது எப்படி என்று பலரும் எனக்கு தொடர்ந்து ஈமெயில், வாட்ஸ்அப், போன் மூலமாக கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.

நரிகளை வெல்ல வேண்டுமென்றால் வனவிலங்குகள் எல்லாமே சிறுத்தைகள் ஆக மாற வேண்டும்.

ஆனால் இப்பொழுது உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

டிவியில் எந்த விஷயம் புதிதாக வந்தாலும் உடனே எனக்கு  500 ஈமெயில் வருகிறது. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஏன் இப்படி சொல்கிறார்கள்? இது உண்மையா பொய்யா?

இப்படி டிவியில் வரும் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னிடமே கேள்வி கேட்கும் வனவிலங்குகள் இருப்பதால். இப்போதைக்கு நரிகளை ஜெயிக்க முடியாது.

நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே புரிந்துவிட்டது. எனக்கு கேள்விகளே இல்லை. நான் வனவிலங்குகளை சிறுத்தை களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன். என்று மிகவும் சொற்பமான சிறுத்தைகள் மட்டுமே எனக்கு ஈமெயில் அனுப்பி இருக்கிறார்கள்.

எப்பொழுது என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்துகிறீர்களோ அப்பொழுதுதான் நரிகளை ஜெயிக்க முடியும். எனக்குப் புரிந்தது அனைவருக்கும் புரிய வேண்டும் அப்போது தான் ஜெயிக்க முடியும்.

என்னுடன் பல வருடமாக இணைந்து செயல்படும், இணைந்து பயணிக்கும் பலரும் திரும்பத் திரும்ப கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

நான் ஒரு நாளைக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியவில்லை. எதிரியும் திட்டமும் தெரியவில்லை. எதிரியின் பலமும் தெரியவில்லை. நமது நிலையும் தெரியவில்லை. ஒற்றுமை இல்லை. வீரம் இல்லை. தைரியம் இல்லை. சமுதாயத்தை காப்பாற்றும் எண்ணமும் இல்லை. அனைத்து வன விலங்குகளும் அப்பா படத்தில் சொல்வதைப் போல " இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துட்டு போய்விடுவோம்"  என்று வாழ்வதால் நரியை வெல்வது கடினம்.

நரியை வெல்ல வேண்டுமென்றால்,  சிறுத்தைகளுக்கு புரிந்தது வனவிலங்குகளுக்கும் கழுதைகளுக்கும், சிங்கராஜாவுக்கும் , மிச்சர் ராஜாவுக்கும், தியான ராஜாவுக்கும், செல்பி ராஜாவுக்கும் புரியவேண்டும்.

எப்பொழுது உங்களுக்கு கேள்விகளே இல்லாமல் பதில் மட்டும் இருக்கிறதோ அப்பொழுது நீங்கள் உங்களை சிறுத்தை என்று கூறிக் கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையை படிக்கும் நீங்கள் யார்?

சிறுத்தையா?
வனவிலங்கா?
கழுதையா?
சிங்கமா?
நரியா?

அல்லது இந்த ஐந்திலும் அடங்காத ஜந்துவா?

இப்படிக்கு.
கோயமுத்தூர் சிறுத்தை.

onestoneninemango@gmail.com என்ற இமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பினால் எனது 9 கட்டுரைகள் ஆட்டோமேட்டிக்காக உங்களுக்கு அடுத்த வினாடியே வரும்.

இந்த ஒன்பது கட்டுரைகளை முழுவதுமாக படித்து புரிந்து கடைபிடித்தால் மட்டுமே இப்பொழுது உள்ள சூழ்நிலையை சமாளிக்க முடியும்.

இவ்வளவு நடந்த பின்னும் இந்த ஒன்பது கட்டுரையை படிக்க நேரமில்லை என்றால்... என்னிடம் பேசாதீர்கள்? நான் உங்களுடன்....டூ.....

வெற்றி நமதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.