20/09/2020

ஒவ்வொரு சுயமும் அன்பின் பிரவாகமே...

 


அன்பு புறத்தை பொறுத்து வருவதல்ல..

அது அகத்தன்மையின் ஒளிவீச்சு..

ஆன்மாவின் ஒளி..

கடல் போன்றது அன்பு..

அதை குறுகிய இடத்தில் சிறைபடுத்த முடியாது..

தன் மேல் அன்பாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்..

என்னால் அன்பாயிருக்க முடியுமா....? என்றும்..

நாம் அன்பால் நிறைந்து இருக்கிறோமா என்றும்  சிந்தித்தாலே போதும்..

அன்பின் ஊற்று பெருக்கெடுக்கும்..

முகவரி வைத்து முத்திரை பதிப்பதல்ல அன்பு..

சுவாசிக்கும் காற்றாய்..

எங்கும் நிரம்பியதாய்..

பரவி இருப்பது அன்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.