24/09/2020

தோனியால் நாட்டுக்கு ஏதேனும் நம்மை இருக்கா?

 


அவன் ஒரு கார்ப்பரேட் விளம்பரவாதி , நாட்டுக்கு கேடான நமது கலாச்சாரத்தையும் இயற்கையும் அழிக்கும் எல்லா கார்ப்பரேட் விளம்பரங்களிலும் நடித்து பல்லாயிரம் கோடி சேர்த்து விட்டான். இனி அவன் விளையாடினால் என்ன ? விளையாடவிட்டால் என்ன ?

தோனி நடிக்காத விளம்பரமே இல்லை.  Orient, Lava, Dream11, aircel, pepsi, Colgate, bharat matrimony, lays, boost, life insurance, dabur, icici bank, exide,TVS இன்னும் பல இருக்கிறது. அவன் அவனுக்காக சம்பாதிக்கிறான் இதனால் மக்கள் ஏன் அவனுக்கு வருத்தப்பட வேண்டும் விளையாடவில்லை என்றால்..

Insurance என்பதே மோசடி. அதுவும் கொரோனா சமயத்தில் பல Insurance கம்பெனிகளின் விளம்பரங்களில் நடித்துள்ளான்..

இளைஞர்களின் ரோல்மாடலுக்கு மது விளம்பரத்தில் சூதாட்ட விளம்பரத்திலும் என்ன வேலை?

சினிமாவும் , விளையாட்டு போட்டிகளும் உருவாக்கப்பட்டதன் நோக்கமே மக்களை சிந்திக்க விடாமல் செய்து 24 மணி நேரமும் பொழுதுபோக்குகளில் மூழ்கடித்து உண்மைகளை அறியவிடாமல் கட்டுப்படுத்தி  " Vs " என்ற பெயரில் பிளவுகள் உண்டாக்கி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை அரசாங்கம் நடத்தி கொண்டு இருக்கிறது..

இன்னமும் விளையாட்டு போட்டிகள் நாட்டுக்காக விளையாடப்படுகிறது என்று மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் எல்லா விளையாட்டுகளும் வியாபாரம் , சூதாட்டம் மற்றும் நாட்டின் பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப மட்டுமே..

இதே தோனி நாளை அரசியலுக்கு வந்தாலும் அதை மக்கள் ஆதரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை..

இவர் மட்டுமல்ல பல பிரபலங்களும் இதே வேளை தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.