30/09/2020

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை - தேர்தல் ஆணையம்...

 


தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இப்போது இல்லை.

மேலும், அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்தில் நடத்தப்பட வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் என பல மாநில தலைமைசெயலர்கள் கடிதம் எழுதியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.