24/12/2020

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

 


இந்தியாவில்  கொரோனா அதிகம் பாதிப்பு கொண்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

இந்த நிலையில், மும்பை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கிளப்பில் அதிகாலை 3 மணியளவில் மும்பை போலீசார் சோதனை நடத்தினர். 

அப்போது, விதிகளை மீறி செயல்பட்டதாகவும், இரவில் நீண்ட நேரம் கிளப்பில் இருந்ததாகவும் கூறி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாடகர் குரு ரந்தாவா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட ரெய்னா ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக மும்பை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.