16/01/2021

1996 ஆம் ஆண்டில் நடந்த பிரீமேசன் டிராமா மீண்டும் ரிபீட்டு.. காரித் துப்ப தவறாதீர்...


ஜெயலலிதா நாற்காலி எனும் உயிரை வீழ்த்தியது எப்படி ? ஏன் ?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது குருமூர்த்தி - ப.சிதம்பரம் கூட்டணியின் பிரீமேசன் டிராமா வெளிப்படையாகவே தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டது.

காரணம் ஜெயலலிதா தமிழகத்தில் முதல் முறையாக இலுமினாட்டியின் இடதுசாரி வலதுசாரி டிராமாவை முறியடித்தார். வலதுசாரி கட்சியாக ராக்பெல்லர் பவுண்டேஷனால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் இயற்கை வளச் சுரண்டல் ஏற்றுமதி, உழைப்பு சுரண்டல் ஆகியவை இல்லாமல் உழைப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து populist வெகுஜன ஆதரவு கட்சியாக அதிமுகவை மாற்றினார்.

இடது சாரிகளின் ஜாதி மதம் இன வர்க கலவர தூண்டுதல்களையும் இரும்புக் கரம் கொண்டு அடக்கினார் ஜெயலலிதா.

இதற்கு காரணம் அமைச்சர்களை வால் ஆட்ட இடம் கொடுக்காமல்,துறை செயலாளர்களையும் ,காவல்துறை, உளவுத்துறைகளை தன் நேரடி கட்டுப்பாடில் வைத்து இருந்தார் ஜெயலலிதா.

சின்ன பைலாக இருந்தாலும் ஜெயலலிதாவின் நேரடி பார்வைக்கு போகாமல் அது கையெழுத்து ஆகாது. இதனால் குருமூர்த்தி,சோ,ரஜினி உள்ளிட்ட ராக்பெல்லர் பிரீமேசன் கும்பலும்,ப. சிதம்பரம் தலைமையில் ஃபோர்டு பவுண்டேஷன் கும்பலும் 1991 ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை ஜெயலலிதாவின் அதிகாரதாத்தில் எவ்வித தலையீடும் செய்ய இயலவில்லை.

சாராய வியாபாரத்தையும் இந்த கும்பலிடம் இருந்து பிடுங்கி மிடாஸ் மூலமாக தன் கட்டுப்பாடில் கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதில் துக்ளக் சோவையும் பங்காளி ஆக்கிக் கொண்டார்.

இதனால்தான் தங்களால் வளர்க்கப்பட்ட ஜெயலலிதா சுய சக்தியாக வளர்ந்து விட்டார் என்பதை உணர்ந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று களம் இறங்கினர்.

இதற்கு முக்கிய காரணம் அந்நிய தாராளமய மயமாக்கலான WTO ஒப்பந்தத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியாது என்று அறிவித்து விட்டார் ஜெயலலிதா.

இதனால் அன்று S.M.கிருஷ்ணா போன்ற ஆட்களை வைத்து கர்நாடகாவுக்கு அத்தனை ஐ.டி கம்பெனிகளையும் கொண்டு சென்றனர்.

சசிக்கலாவால் செய்யப்பட்ட கையாடல்கள் துருவித் துருவி தோண்டி தங்கள் மேசானிய  மீடியா மூலம் பூதாகரமாக தோண்ட வைத்தார் குருமூர்த்தி. குருமூர்த்தியை கை வைத்த முதல் ஆள் ஜெயலலிதா.

வழக்கு மேல் வழக்கு தொடுத்த இந்த மேசானியர்களான ப.சிதம்பரம், துக்ளக் சோ, குருமூர்த்தி மற்றும் மாறன் பிரதர்ஸ் ஆகியோர்களை விடவா அதிக ஊழல் செய்து இருப்பார் ஜெயலலிதா ?

வழக்கு தொடுத்தும் சரண் அடையாத்தாலும், தங்களை எதிர்த்து தேசிய கட்சி உடன் போட்டதாலும் மிகப் பெரிய ஆச்சரியம் ஒன்று நடந்தது.

அது என்ன தெரியுமா ?

நாட்டைக் காட்டி கொடுத்து சர் முத்தையா என்று பட்டம் பெற்று, மக்களை ஏமாற்ற செட்டிநாடு என தன் ஜாதி் பெயரி்ல் ஒரு புதிய நாட்டை உருவாக்க வைத்த கொடூரமான ஃபிரீமேசன்தான் ப.சிதம்பரத்தின் தாத்தா ராஜா சர் முத்தையா.

இந்த ப.சிதம்பரம் தான் 1960 ஆம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியஸ்தராக இருந்தவர் என்பதை யாராவது அறிவீர்களா ?!

ஏன் என்றால் அப்போது ஃபோர்டு பவுண்டேஷன் தனது இடதுசாரி A டீமில் கம்யூனிசத்தை உலகம் முழுவதும் பணக்கார இளைஞர்களை வைத்து பரப்பி வந்தது.

ராஜாஜியின் வலதுசாரி பிரீமேசன் குட்டிகளான சோ, குருமூர்த்தி பற்றி பல பதிவுகளில் எழுதி உள்ளேன்.

இவன் அடிப்பது போல அடிப்பான்.

அவன் அழுவது போல நடிப்பான்.

இதுவே இவர்களது மேசானிக்  டெக்னிக்.

ஆனால் எந்த வழக்கு தொடுத்தாலும் சுப்ரீம் கோர்ட்டை நடு ராத்திரியில் திறந்து நூற்றுக்கணக்கான முறை முன் ஜாமீன் இவர்களுக்கு மட்டும் கிடைக்கும்.

வரலாற்றில் இந்த A டீம், B டீம் இரண்டும் தேவைப்பட்டால் ஒன்றாகவும் இணைவார்கள் என்பதும் தெரியுமா ??!

இந்திராகாந்தி, ரோத்ஸ்சைல்டு நடத்தி வந்த பினாமி தனியார் வங்கிகளை அரசுடமை ஆக்கிய போது இந்த அதிசயம் நடந்து அவருக்கு சர்வாதிகாரி பட்டம் கொடுத்து  சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ராஜீவ்காந்தி கதையும் அவ்வாறே முடிக்கப்பட்டது.

இரண்டாவது உலக ஆச்சரியம் 1996 ஆண்டில் தமிழகத்தில் நடந்தது தான்.

துக்ளக் சோ,குருமூர்த்தி,ரஜினி போன்ற ராக்ஃபெல்லர் வலதுசாரி B டீமும், பரம விரோதியாக அது வர காட்டிக் கொண்ட A டீம் ப.சிதம்பரமும் கை கோர்த்ததுதான் அந்த அதிசயம்.

மத்திய காங்கிரஸில் முக்கிய பதவி வகித்த ப.சிதம்பரம் அதை எல்லாம் ராஜினாமா செய்து விட்டு ஜி.கே.மூப்பனார் எனும் குட்டி மாநிலத் தலைவரின் குட்டி த.மா.க கட்சியில் இரண்டாம் கட்ட தலைவராக சேர்ந்த பரம ரகசியமும் இதுதான்.

இரண்டாம் கட்டத் தலைவர் என ப.சிதம்பரம் தன்னை வெளியில் காட்டிக் கொண்டாலும் குருமூ்த்தி, ப.சிதம்பரம் டீம்தான் இந்த மூப்பனாரின் கட்சியையே நடத்தியது. காரணம் மூப்பனார் கபிஸ்தலம் உள்பட பல்வேறு பல்லாயிரக்கணக்கான கோயில் நிலங்களை ஆட்டைய போட்டு வைத்து இருந்ததே இந்த கும்பலுக்கு அடிமை ஆனதன் காரணம். அதன் நன்றிக் கடன்தான் G.K.வாசன் மேல் சபை M.P.

இந்த A டீம் B டீம் சீராட்டி பாலூட்டி வளர்த்ததுதான் மாறன் பிரதர்ஸ் டீம்.

இந்த 3 ஊழல் டயனோசர்களும், ஜெயலலிதா என்ற ஒரு குடும்பம் இல்லாத ஒரு பெண்ணை சர்வாதிகாரி லெவலுக்கு மீடியாவில் பிரச்சாரம் செய்தது ஏன் என தெரியுமா ??

அமெரிக்காவில் இயங்கும் இலுமினாட்டியின் தலைமைச் செயலகமான பில்டர் பர்க் குழுவின் ஃபைல்களை இவர்கள் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் கொடுத்தனர். மக்கள் விரோத திட்டம் என தெரிந்த உடன் இவைகளை குப்பையில் தூக்கி வீசினார் முதல்வர் ஜெயலலிதா.

இவற்றை மீடியா மூலம் ஜெயலலிதா மூலம் பரப்பி விடுவார் என அறிந்தே அவரது சேனல்கள் முடக்கப்பட்டது.

மீடியா சேனல்கள் அவர்களை மீறி நடத்த இயலாது.

இதே A டீம் B டீம் இணைந்துதான் பல் போன ரஜினி தாத்தாவை களம் இறக்குகின்றனர்.

ரஜினி தாத்தாவை கை தாங்கலாக அழைத்து வரும் தமிழருவி மணியன் காங்கிரஸ் ஸ்லீப்பர் செல். பாஜகவில் இருந்த அர்ஜூண மூர்த்தி திமுக ஸ்லீப்பர் செல்.

கூட்டிக் கழிச்சு கணக்கு போட்டு பாருங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.