01/01/2021

போலி என்கவுண்டரில் தொடர்ந்து கொல்லப்படும் இந்த மகன்களுக்காக நீங்கள் வெளியே வராவிட்டால் நாளை உங்கள் மகன்களுக்காவும் யாரும் வரப்போவதில்லை என காஷ்மீர் முழுதும் அறைகூவல்...

 


காஷ்மீரி அன்னைகள் நாளை ஸ்ரீநகரை ஆக்கிரமிக்கிறார்கள்...

காட்டுமிராண்டிகளின் கைகளில் அதிகாரம் இருப்பதால் மானுட வரலாறு மிகவும் தாழ்வானதொரு நிலையை அடைந்திருக்கிறது. இது இந்தியாவிற்கான அவமானம் இல்லை, மானுட வரலாற்றின் அவமானம்.

மனிதம் இன்னும் காட்டாண்டி நிலையில் இருந்து முற்றிலும் விடுதலை அடையவில்லை. 

சமீபத்தில் 'aggression, warfare' பற்றியெல்லாம் ஒரு செமினாருக்காக வாசிக்க நேரிட்டது. 

உலகில் மனிதன் தவிர வேறு எந்த உயிரினமும் சக உயிரினத்தை (conspecifics) கொல்வதில்லை என வாசித்த போது ஒரு உயிரியாய் வெட்கப்பட்டேன்.

அந்த வெட்கம் கமேண்டர் விஜயகுமாருக்கும்,  அவரை கொண்டாடிய சிவக்குமார் பளுவாரங்களுக்கும், இவர்களின் டெல்லி ஓனர்களுக்கும் இருக்குமா என தெரியவில்லை.

பள்ளி, கல்லூரி மாணவர்களை கொல்லும் சிந்தனை கொண்டோரை தேர்தலில் தோற்கடிப்பது அந்த சிந்தனையை கொல்லுமா என தெரியவில்லை.

விஜயகுமார் தமிழ்நாடு கேடரில் இருந்து வந்தவர் என காஷ்மீரிகளுக்கு தெரிய விடாது பார்த்துக் கொள்ளுங்கள், நபிகளே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.